கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது
கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது
அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார்
அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது
1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது
இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம்
மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு
கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் நிலைக்கு சமூகம் இருக்கின்றது
மாணவர்கள் தேர்வுக்காக சாகின்றார்கள், தேர்வு முடிவுகளில் சாகின்றார்கள்
இப்பொழுதெல்லாம் வகுப்பறையிலே சாக தொடங்கிவிட்டார்கள்
பெரும் அழுத்தத்தை அவர்கள் மேல் கொடுத்து அவர்களின் இளமையினையும் அழகிய காலங்களையும் கொல்லும் சமூகம் இப்பொழுது உயிரையும் எடுக்க தொடங்கியாயிற்று
அந்த மாணவிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
கல்விதான் வாழ்க்கை என நம்பும் சமூகம் இனியாவது திருந்தட்டும், வாழ்வில் கல்வியினை தாண்டி ஏராளமான விஷயங்கள் உண்டு