கன்னி மரியாளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்- எச்.ராஜா
கன்னி மரியாளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்- எச்.ராஜா
மஹாபாரத குந்திக்கு எப்படி கர்ணன் பிறந்தான் என நாங்கள் நாகரீகமாக கேட்டுவிடுமோம்
ஆனால் பெரியார் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றார், எல்லாம் சபையில் சொல்லமுடியாத கேள்விகள், அவர் கேட்ட நாகரிகமான கேள்விகள் என இவைகளைத்தான் சொல்ல முடியும்
“ஆண் சாமியான சிவனும், இன்னொரு ஆண் சாமியான விஷ்ணுவும் ஆணும் சேர்ந்து பெற்ற சாமி அய்யப்பனாம், இது எப்படிங்க முடியும்?
ஆயிரம் வருஷம் வருஷம் வேலை வெட்டியே செய்யாம சிவன் உடலுறவு வச்சி பொறந்தானாம் முருகன், அதுவும் தாமரை பூவுக்கும் சிவனுக்கும் பிறந்தவனாம்
முருகன், எப்படிங்க?
முனிவர் பொண்டாட்டி எங்க இருக்காண்ணு ஒருத்தன் தேடி தேடி ஓடிருக்கான், அவன் தேவர்களுக்கு அரசனாம். அவனே அப்படிண்ணா மற்ற தேவர்கள் எல்லாம் எப்படி இருப்பானுக?
முக்காலம் உணர்ந்த முனிவனுக்கு இந்திரன் தன் பொண்டாட்டி கூட இருக்கும் போது தெரியாதாம்
இந்திரனுக்கு சாபத்துல உடம்பெல்லாம்
பெண்குறி வந்ததாம், ஏனுங்க அத பாத்துபுட்டா தேவர்கள் எல்லாம் சும்மாவா இருந்துருப்பானுக…
இவனுக கதை எல்லாமே ஆபாசமுங்க, ஏதும் சொன்னா நம்மளை நாத்திகன்னு திட்டுரானுக, நீங்களே யோசிங்க”
இன்னும் பெரியாரின் கேள்விகள் ஏராளம் உண்டு, எல்லோரும் கேட்டால் நிச்சயம் அது சமூக அமைதிக்கு நல்லதல்ல
மொத்தத்தில் ராசா விரைவில் தமிழகத்தின் பெரும் கலவரங்களுக்கு காரணமாக இருக்க போகின்றார்
இப்போதே அதனை தடுப்பது அரசின் கடமை