கப்பல் படலம் முடிந்து , பணய கைதிகள் படலம் தொடர்கின்றது

இப்போதைக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆளாளுக்கு கப்பலை பிடித்து வைத்து கொண்டு பிரிட்டனும் ஈரானும் ஆடும் ஆட்டம்தான்

ஆட்டம் கிட்டதட்ட முதல் சுற்று முடிந்து இருவரும் களைத்து மல்லாக்க கிடக்கின்றார்கள்

என்ன நடந்தது முதல் சுற்றில்?

பிரிட்டனுக்கு இது பெரும் அவமானம் சந்தேகமில்லை, ஆனால் அமெரிக்காவும் வரிந்துகட்டி வரவில்லை, அதிரடியாக கப்பலை விடுவிக்க நடந்த லண்டன் கூட்டம் முடிவு அறிவிக்கபடாமல் முடிந்தது, ஈரானும் அசைவதாக தெரியவில்லை

ஏன் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அங்குதான் இருக்கின்றது பிரிட்டனின் வியாபார கணக்கு, பிரிட்டானிய கப்பல் வெற்று கப்பலாக எண்ணெய் ஏற்ற சென்றபோது ஈரானிடம் சிக்கியது

ஆனால் ஈரானிய கப்பல் நிரம்ப நிரம்ப எண்ணெயுடன் பிரிட்டனிடம் சிக்கியது

ஆக வெற்றுகப்பலை விட்டுவிட்டு நிறைந்த எண்ணெயுடன் கப்பலை வாங்கிவிட்டோம் என்ற வியாபார கணக்கோடு பிரிட்டன் முடித்துகொண்டது

கிட்டதட்ட வடிவேலு ஸ்டைலில் பேக்கரி டீலிங் கதைதான், “அந்த கப்பலை நீ வச்சிக்க இந்த கப்பலை நான் வச்சிக்கிறேன்” என டீலீங் செய்து முடித்துவிட்டார்கள்

விஷயம் வெறும் கப்பலும் எண்ணெயும் என்றால் விஷயம் முடிந்திருக்கலாம், ஆனால் பிரிட்டன் கப்பலில் 23 பேர் இருந்தார்கள் அவர்கள்தான் விவகாரம்

பிரிட்டன் அவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைபடவில்லை, வெள்ளை மேலாதிக்க மனப்பான்மை அதுதான், அப்படித்தான் இருப்பார்கள்.

கிறிஸ்தவர்கள் என்றாலும் இரக்கம் இருக்காது, கொஞ்சமும் மனிதாபிமானமும் இருக்காது எல்லாம் அகம்பாவம்

ஆம், அந்த 23 பேரும் பிரிட்டானியர் அல்ல, 17 பேர் இந்தியர்கள் மீதி ரஷ்யர்கள்

இதனால் எந்த நாட்டுக்காரன் எப்படி போனால் என்ன? இந்தியாவும் ரஷ்யாவும் ஈரானின் கூட்டாளிகள்தானே, அவர்கள் விடுவிக்கட்டும் என அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

ஈரானோ அவர்கள் பிரிட்டனுக்காக வேலை செய்தவர்கள் என்பதால் பிரிட்டனே கோரிக்கை வைக்கட்டும் என சொல்கின்றது

இந்தியாவும் ரஷ்யாவும் அவர்களை மீட்க கோரிக்கை வைத்தாலும் ஈரான் பிரிட்டனை கைகாட்டுகின்றது

பிரிட்டனோ மகா அமைதி, அவர்களின் அகம்பாவம் அப்படித்தான்

இப்பொழுது கப்பல் படலம் முடிந்து , பணய கைதிகள் படலம் தொடர்கின்றது

ஆனாலும் கப்பலுக்கு கப்பல் சரி, எண்ணெய்க்கு என்ன பதில் என கொலைவெறியில் திரிகின்றது ஈரான், பிரிட்டானிய விமான சேவை மேற்காசியா எகிப்து பக்கம் ரத்து என அறிவித்திருப்பதன் பின்னால் என்ன விஷயம் உள்ளது என்பதை இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள்