கமலஹாசனுக்கு எதிராக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்கு

கமலஹாசனுக்கு எதிராக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்கு தொடுக்க போவதாக செய்திகள் வருகின்றன‌

அதாகபட்டது கமலயாசனின் மக்கள் நீதி மய்யம் என்பது, லோக் அதலத் நீதி மன்றம் என்பதின் தமிழாக்கமாக வருகின்றது அதானால் அவரின் கட்சி பெயரை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்க கூடாது என சொல்கின்றார்களாம்

உண்மையில் நீதி மன்றம் எனும் பெயர் நீதி மையம் எனும் பொருளில் வரும். இந்த குற்றச்சாட்டிலும் நியாயம் இல்லாமல் இல்லை

வழக்குதொடுக்க போகின்றவர் யாரென பார்த்தால் வலம்புரி மோசே என்பவராம். இவர் வலம்புரி ஜாண் குடும்பத்துகாரர். மோ.சேவியர் எனும் பெயரை மோசே என சுருக்கி இருப்பவர்

முன்பு நமது நண்பராக இருந்தார், ஏதோ ஒரு அரசியல் பதிவில் முறுக்கிகொண்டு சென்றவரை காணவில்லை

வள்ளியூரில் தேடியபொழுது அவர் தினகரன் அணிக்கு சென்றதாக சொன்னார்கள்.

சசிகலாவிற்கும் வலம்புரி ஜாணுக்கும் இடையே நடந்த பனிப்போர் பிரசித்திபெற்றது. வலம்புரிஜாண் சசிகலாவினை தாக்கிய அளவு இன்னொருவர் தாக்கி எழுதியிருக்க முடியாது

ஆனால் வலம்புரி மோசேக்கு தினகரன் பெரிய அபிமான தலைவராக ஆகிவிட்டார், வலம்புரி ஜாண் ஆன்மா என்ன செய்யுமோ தெரியாது, என்னமும் செய்யட்டும்

அரசியல் என்பது இதுதான்

முன்பு கமலஹாசனுக்கு எதிராக வள்ளியூரில் வழக்கு தொடரபட்டது, இப்பொழுதும் வழக்கு பாய போகின்றது. வள்ளியூர்காரர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்போ?

பொதுவாக கமலஹாசன் படங்களின் பெயருக்குத்தான் வழக்கும் வம்பும் வரும், பின் அவர் படத்து கதைகளுக்கு வந்தது

இப்பொழுது கட்சிபெயருக்கும் வழக்கு வந்துவிட்டது.