கமலஹாசன் என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான காமெடிகள் கிளம்புகின்றன
கமலஹாசன் என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான காமெடிகள் கிளம்புகின்றன
பொதுவாக மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, எதிர்கட்சிகாரனுக்கும் வோட்டுரிமை உண்டு என ஒரு மாதிரி வாழ்த்தும் திமுக, இப்பொழுது காகிதபூ மணக்காது என சொல்லிவிட்டது
(இதே திமுக முன்பு தங்க பூவான குஷ்பூவினை சேர்த்ததும், பின் அவரின் அதிரடியான வளர்ச்சிக்கு பயந்து விரட்டியது பற்றி எல்லாம் பேச கூடாது. ஆக தலைவி காகித பூ அல்ல என்பதை திமுக புரிந்தவரைக்கும் சங்கம் மகிழ்கின்றது)
“நான் பூ அல்ல விதை” என கமலஹாசன் சீற, ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் ஜெயகுமார் அது மரபணு மாற்றபட்ட விதை என சொல்லவருவதுதான் காமெடி
கமலஹாசன் அட்டகாசமாக கலாய்த்திருக்கலாம், “ஸ்டாலினுக்கு நான் பதில் சொன்னால் ஜெயகுமார் ஏன் பதில் சொல்கின்றார்? இரு கட்சியும் இணைந்துவிட்டதோ?” என கேட்டால் ஜெயகுமார் அவுட், ஆனால் கேட்கவில்லை
இப்பொழுது கமல் பாவத்தை கழுவவே ராமேஸ்வரம் சென்றார் என்கின்றார் அதிமுக உதயகுமார்
“அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, கும்பகோணத்தில் பாவம் தொலைக்க குளிக்க ஜெயலலிதா இறுதியில் குற்றவாளியாகத்தானே தீர்ப்பிடபட்டார்” என கமல் கேட்டிருக்கலாம் ஆனால் கேட்கவில்லை
இந்த கமல் பாவத்தை தொலைக்க ராமேஸ்வரம் சென்றார் என்றால் , இந்த பன்னீர் பழனிச்சாமி அணிகளை சேர்த்து வைத்த பாவத்தை மோடி எங்கு தொலைப்பார்?
அதற்குத்தான் முன்னெச்செரிக்கையாக வாரனாசி தொகுதியில் மோடி ஜெயித்தாரோ என்னமோ?
அனுதினமும் கங்கையில் மூழ்க வசதியாக அதனை தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது
கமல்ஹாசன் கட்சி தொடங்கியது தமிழகத்துக்கு பெருத்த அவமானம்- பொன்.ராதாகிருஷ்ணன்
அதானே, எச்.ராசா, தமிழிசை போன்ற மாபெரும் அரசியல்வாதிகள் உலவும் தமிழகத்தில் கமலஹாசனும் ஒரு கட்சி தலைவர் என வந்தால் அது எவ்வளவு பெரும் அவமானம்?