கமல் அரசியலுக்கு தகுதியற்றவர் : திடீர் போராளிகள்

கமலஹாசன் தனிமனித ஒழுக்கமில்லாதவர் அதனால் அவர் அரசியலுக்கு தகுதியற்றவர் : திடீர் போராளிகள்

ஏம்பா சேர, சோழ, பாண்டி மன்னர்கள் எல்லாம் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்ந்தவர்களா?

சரி மன்னர்களை விடுங்கள்

“அந்த நடிகை பத்தினி அல்ல, நான் முனிவன் அல்ல..” என சொன்ன அண்ணாவின் ஒழுக்கம் என்ன?

கலைஞராவது மனைவி, துணைவி என நிறுத்திகொண்டார்

ஆனால் ராமசந்திரனின் கணக்கு வகை என்ன?, பெயர்தான் ராமசந்திரன், ஆனால் செய்ததெல்லாம் ராவணன் வேலை என்பதற்கு கணபதியின் மனைவி ஜாணகியே சாட்சி.

அது வெளிவந்த கதை, இன்னும் வராத கதை எத்தனையோ.

சோபன்பாபுவோடு தாலிகட்டாமல் கெட் டுகெதெர் செய்தவர்தான் ராமசந்திரனின் அரசியல் வாரிசு

ஆக நடிகையினை வைத்திருக்கின்றேன் என சொன்னவர் “பேரரிஞன்”, அடுத்தவன் மனைவியினை சேர்த்துகொண்டவன் “புரட்சி தலைவன்”

எங்கெல்லாமோ கோயிங் ஸ்டடி படித்துவிட்டு வந்தவர் “புரட்சி தலைவி”

பொதுவாக சொன்னால் அந்த திராவிட கட்சி தலைவர்கள் எல்லோருக்குமே இரண்டிற்கு மேல்தான் கணக்கு

தனிமனித ஒழுக்கத்தை பார்த்தால் இவர்கள் எல்லாம் வார்டு கவுண்சிலர்கள் ஆகியிருக்க முடியும்?

திடீர் போராளிகளில் சீமானின் ஒழுக்கம் விஜயலட்சுமியிடம் கேட்டாலே தெரியும்

ஏதோ இவ்வளவு நாளும் மிகுந்த ஒழுக்கமும், ஆச்சாரமும் கொண்டோரை அரசியலுக்கு தமிழகம் தேர்ந்தெடுத்தது போலவும், அந்த பெருமையினை கமல் கெடுக்க வந்தது போலவும் பலர் பேசிகொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே பல பன்றிகளால் சேறான 
சேறான குட்டையில் எந்த எருமை புகுந்தால் என்ன?