கமல் சீமான் சந்திப்பு…
“”என்போக்கில கட்சி பணி பார்த்துட்டு இருந்தேன் மயிலு, இந்த சீமான் பய வீடு தேடி வந்து இப்படி நிறுத்திட்டான்
இவன யாருங்க இங்க வரசொல்லிருப்பாங்க, ஆரம்பமே பயமா இருக்கு மயிலு..
அந்த பரட்டை பய வேலையாத்தான் இருக்கும் மயிலு” ..”
“அய்யா கமலஹாசனை இப்பொழுதுதான் சந்தித்தேன், நல்ல தமிழ் பேசுகின்றார். குரல் சோதனை, ரத்த சோதனை , முப்பாட்டன் சோதனை எல்லாம் செய்தாயிற்று. அவர் தமிழர்தான்
“காதலா காதலா” படத்தில் கூட முப்பாட்டன் முருகன் கெட்டப்பில்தான் ஆடியிருக்கின்றார் இந்த தமிழ்பிள்ளை என்பது மகிழ்ச்சி
“தெனாலி”யில் கூட அய்யா ஈழத்து தமிழ்பேசி அந்த வலியினை உலகெல்லாம் தெரியபடுத்தியிருந்தார்.
தமிழக அரசியலுக்கு வருவதற்காக வடுக வந்தேறி கவுதமியினை கூட விரட்டி விட்ட இன உணர்வாளர் அய்யா கமலஹாசன்
இன விடுதலைக்கு அய்யா கமலஹாசன் எங்களோடு பாடுபடுவதாக சொல்லியிருக்கின்றார், ஆனால் யாரிடமிருந்து இன விடுதலை பெறுவது என்பது எங்களுக்கே குழப்பமாய் இருக்கின்றது..”
“இங்க பாரு அவரும் “சிங்களத்து சின்ன குயிலே”ன்னு பாடியிருக்காரு, நீங்களும் சிங்களத்தி பூஜா வைத்தெல்லாம் படம் பன்னீருக்கீங்க, இரண்டு பேருக்கும் அந்த ஒற்றுமையா அண்ணேன்னு எவனாவது கேட்டேன்னு வச்சிக்க…..”
சில பகுதிகளில் அடக்கம் செய்யபட இருக்கும் சடலத்தை கூட “மய்யம் ” என்றுதான் சொல்வார்கள்.
கமல் எனும் மாபெரும் கலைஞன் செத்துவிட்டான் என்ற “மய்யம்” அடக்கம் செய்யபட புறப்படப்போகும் ஊர்வலம் போலவே இது தெரிகின்றது