கம்போடியாவிலும் ஏதும் நடக்கலாம்
இலங்கை திரிகோணமலை துறைமுகம் எவ்வளவு ராணுவ ரீதியாக முக்கியமானதோ அப்படி கிழக்காசியாவின் மகா முக்கியமான துறைமுகம் கம்போடியவின் ரீம் துறைமுகம்
இரண்டாம் உலகபோரின் பொழுது பிரிட்டன் அதை உணர்ந்தது, ஜப்பான் உணர்ந்தது வியட்நாம் போரின் பொழுது அமெரிக்கா உணர்ந்தது
இப்பொழுது தென் சீனகடல் விவகாரத்தால் அமெரிக்காவுக்கு அதை கையில் எடுக்க கடும் விருப்பம்
ஆனால் விடுமா சீனா? அது முந்திகொண்டது. இப்பொழுது கம்போடியா சீனாவின் பிடியில் சிக்கிவிட்டது
ஆனாலும் சில ஆசைகாட்டி பார்த்தது அமெரிக்கா, அது பலிக்கவில்லை என்றதும் சீண்ட ஆரம்பித்தது
கம்போடிய ஆளும் கட்சி தில்லுமுல்லு செய்துதான் ஜெயித்தது, அதை குறிவைத்து சீண்டியது அமெரிக்கா
கம்போடியா வியட்நாம் அருகில் இருப்பதால் என்னமோ சட்டென அமெரிக்காவின் முகத்தில் குத்தியது போல் சொல்லிவிட்டது இப்படி
“எங்கள் நாட்டைபற்றி பேசிவிட்டு அமெரிக்க தூதரகம் ஏன் இங்கு இருக்க வேண்டும்? நாம் அழைத்தோமா? பிடிக்காவிட்டால் கிளம்புங்கள்” என சொல்லிவிட்டது
உலகின் ஒவ்வொரு நாடும் “வாராய் நீ வாராய்” என சர்வசக்தி படைத்த அமெரிக்காவினை அழைக்க தம்மாதுண்டு கம்பொடியா வலுவாக அடித்திருக்கின்றது.
அமெரிக்காவின் பதிலடி வலுவாக இருக்குமா? இல்லை காரியம் சாதிக்க காலில் விழுவார்களா என்பது இனிதான் தெரியும் எனினும் கம்போடியா அமெரிக்காவின் கொள்ளி கண்ணில் வலிய சிக்கிவிட்டது
கம்போடிய தேர்தலில் குழப்பம் நடந்தது ஒன்றும் ரகசியமல்ல
அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்தது என்பது செய்தி
ரஷ்ய தெர்தலில் தில்லுமுல்லு செய்துதான் புட்டீன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார்
இஸ்ரேலிய தேர்தலின் தில்லுமுல்லு குழப்பத்தில் கிடக்கின்றது, ஓயா போர் போல ஓயாத தேர்தல்
இந்திய தேர்தல் பற்றி இந்தியர்கள் முடிவுக்கே விட்டுவிடலாம்
இதில் கம்போடியா தேர்தலை அமெரிக்கா சீண்டி வசமாக வாங்கி கட்டி அமர்ந்திருக்கின்றது, எங்களை பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள் என கம்போடியா சொன்னபின்பும் நாஞ்சில் சம்பத் படத்து விளம்பரத்தினினை போல காரி துப்பினால் என்ன செய்ய வேண்டும்? “துடைச்சிக்கணும்” என சொன்னபடி அமர்ந்திருக்கின்றது
ஆனால் அமெரிக்காவின் ரகசிய கரங்கள் கம்போடியாவினை விட்டுவிடுமா என்ன?
இலங்கை திரிகோணமலைக்காக அத்தேசமே எரிந்தது போல் இனி கம்போடியாவிலும் ஏதும் நடக்கலாம்
