கய்.. தய் வய்கய் மதுரஅய்…..

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் – ரஜினி பேச்சு

ஆம், அவர் வேலை சூட்டிங்கில் நடிப்பது, ரசிகர் வேலை கட் அவுட் வைத்து பால் ஊற்றிவிட்டு டிக்கெட் வாங்குவது

ஆக அவரவர் வேலையினை அமைதியாக செய்ய வேண்டும், ஆமாம்

(ஒருவேளை வாடகையே கொடுக்காதே, வாங்கின கடனை கொடுக்காதே , யாருக்கும் பதில் சொல்லாதே அமைதியாக வேலை செய் என வீட்டில் யாருக்கோ சொல்கின்றாரோ என்னமோ?)


நானும் கமலும் வேறு பாதையில் பயணம் செய்தாலும் சேருமிடம் ஒன்றுதான் : ரஜினி

எது? மனநலம் மருத்துவமனைதானே? அதற்கு இப்பொழுதே இருவரும் சேர்ந்து சென்றால்தான் என்ன?


அந்த வைகை ஆற்றுக்கு “வய்கய்” என பெயர் மாற்றாமல் சென்றாரே, மதுரை “மதுரஅய்” ஆகாமல் இருந்ததே, அது வரைக்கும் ஆழ்வார் பேட்அய்ய்ய் ஆண்டவனுக்கு கோடி நன்றி


காங்கிரசின் கை சின்னம் இனி “கய்” சின்னம் என அழைக்கபடுமா ???

இரட்டை இலை இனி “இரட்டஅய் இலய்” ஆகுமா?

தய் புத்தாண்டு பிறக்குமா?

வாடிக்கையாளர் சேவை மய்யம்,சுகாதார மய்யம் , குழந்தை பாரமரிப்பு மய்யம் என பல மய்யங்கள் வரும்போல‌