கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ முதல்வர் பழனிச்சாமி
கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ என்னமோ முதல்வர் பழனிச்சாமி திருப்பதிக்கு போயிருக்கின்றார்
அவர் மகா பக்தியாக சாமி தரிசனம் செய்திருக்கின்றார், ஜெயலலிதா இல்லாத காலங்களில் அவரால் நிம்மதியாக சாமி கும்பிட முடிகின்றது, இல்லாவிட்டால் ஜெயாவினை மட்டுமே வணங்க வேண்டும்
அப்படி கும்பிட்டுகொண்டிருக்கும் பொழுது ஒரு பூசாரிக்கு சாமி வந்திருக்கின்றது
உரத்த குரலில் கத்தியபடி சாமியாடிய அவர் ,”ஏய்ய் எடப்பாடிய வந்து என்னை பாக்க சொல்லு, தமிழ்நாடு சீரழந்து போய் கிடக்கு அவன் ஒரு மாயயில் இருக்கிறான் அவனுக்கு ஒன்னும் தெரியாது என அவன் இவன் வாடா போடா” என கத்தி ஆடியிருக்கின்றார்
இது என்னடா சோதனை? ராஜபக்சே வரும்பொழுதே வராத சாமி, மோடி வந்தபொழுதே வராத சாமி இப்பொழுது வந்துவிட்டதா என ஆளாளுக்கு அவரை போட்டு விசாரித்திரித்ததில் அவர் மேல் தவறு இல்லை சாமி வந்தது உறுதியாயிற்றாம்
ஆம் அவர் திமுகவோ, ரஜினி, கமல் கட்சியோ அல்ல, சசிகலா ஆளுமல்ல, பன்னீரின் ஏஜென்டும் அல்ல
இப்பொழுது சிக்கல் என்னவென்றால் எந்த சாமி தன்னை வந்து பார்க்க சொல்லியது என தெரியாமல் மண்டையினை குழப்புகின்றார்களாம்
இதற்கு ஏன் குழம்ப வேண்டும்
அவர்கள் சாமி , இதய தெய்வம் எல்லாம் அம்மா ஜெயலலிதாதான், நிச்சயம் அவர் வந்தது போல்தான் தெரிகின்றது
அதுவும் சாமி ” இவனுக்கு ஒன்றுமே தெரியாது, வாடா, போடா” என அழைத்ததில் எல்லாம் உறுதிபடுத்த முடிகின்றது
அது ஜெயா தெய்வமேதான்
அவர் இவரை , அந்த ஜெயா இருக்குமிடமான “அங்கு” வந்து பார்க்க சொன்னால் இவர் கிளம்பவேண்டாமா?
உடனே கிளம்பட்டும், இல்லாவிட்டால் சாமி சும்மா விடுமா
குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
விவகாரம் சிபிஐ விசாரணை அளவிற்கு சென்றபின் சம்பந்தபட்ட அமைச்சர் பதவி விலகுவதுதான் மானமுள்ள தர்மம்
இவர்களிடம் மானமாவது தர்மமாவது? மிதித்தாலும் பதவிவிட்டு இறங்கமாட்டார்கள்