கர்நாடகா வோட்டும் வேட்டும்
“தகப்பன்னா தேவகவுடா மாதிரி இருக்கணும் மகனே, எனக்கு அப்படி அப்பா வாய்க்கவில்லை
ஆமாம்பா, சோனியாகாந்தி கூட ராகுலுக்கு வழிவிட்டுவிட்டார்கள் , எனக்கும் அப்படி வாய்க்கவில்லை”
“அப்பா, நீங்க கொஞ்சநாளைக்கு தேவகவுடா வீட்டுக்கு போய் டியூசன் படிங்கப்பா..,
இந்த காடுவெட்டி எல்லாம் நம்பிகொண்டிருந்தால் வேலைக்கே ஆகாது”
“பாருங்க தமிழ்நாட்டில் 117 எம்.எல்.ஏக்களை ஒரு பைசா செலவில்லாமல் வாங்கி ஆட்சி செய்கின்றோம்
ஆனால் இந்த கன்னடத்தில் 10 எம்.எல்.ஏ வாங்க முடியல்லை.
இங்கேயும் ஒரு பழனிச்சாமி கும்பல் கிடைச்சிருந்தா, இவ்வளவு கஷ்டம் தேவையா?”
“டேய்…..
எவனாவது குமாரசாமி மாதிரி உங்களுக்கும் யோகம் வரும், அடுத்த தேர்தல்ல தனியா நில்லுங்கண்ணே முதல்வர் ஆகலாம்னு சொல்ல வந்தீங்க……………”.
கர்நாடகத் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர் : செய்தி
“அதே மாதிரி அடுத்த தேர்தலில் இங்கேயும் நடந்துருமோ? அதை நினைச்சாலே கண்ணு கலங்குது..”
அவசரபட்டு லட்டு கொடுத்துட்டோமோ? இனி திருப்பி கேட்டா நல்லா இருக்காது
இன்று வேப்பிலை அரைத்து, மக்களை பிடித்து வைத்து கதற கதற வாயில் கொடுத்துவிடலாம்
கர்நாடகத்தின் வளர்ச்சி தடுக்கப்படுவதை பாஜக அனுமதிக்காது : பிரதமர் மோடி
அதாவது எடியூரப்பா முதல்வராக மாட்டார் என சொல்கின்றாராம், நல்லது.
தமிழ்நாட்டில்தான் பாலமும், பஸ் நிலையமும் இடிகின்றன என்றால், வடக்கே வாரனாசியிலும் மேம்பாலம் இடிந்து பலர் இறந்திருக்கின்றார்கள்
ஆக கட்டுமானத்தில் ஊழல் என்பது திராவிட ஆட்சிக்கும், ராமர் ஆட்சிக்கும் பொது சொத்தாகிவிட்டது
தமிழகத்தில் சுடுகாட்டு கூரை இடிந்து 2 பேரும், பஸ் நிலையம் இடிந்து 5 பேரும் , ஆற்றுபாலம் ஆற்றில் போனதையும் வசமாக மறைத்துவிட்டு வாரனாசியில் பாஜக ஊழல் என பலர் குதிக்கின்றார்கள்