கறுப்புபணம் நாட்டின் பிரச்சினை ஒழிப்போம் என்றார்கள்

கறுப்புபணம் நாட்டின் பிரச்சினை ஒழிப்போம் என்றார்கள், வெளிநாட்டு கறுப்புபண மீட்பு வடகொரியா ராக்கெட் போல எங்கோ காணாமல் போயிவிட்டது, அதனால் என்ன உள்ளூரில் செல்லாத நோட்டு என அறிவித்து கள்ளநோட்டு எல்லாம் ஒழித்துவிட்டோம் தேசம் வளரும் என்றார்கள்

ஒன்றும் நடக்கவில்லை

வரி சீரமைப்பு சரியில்லை என்றார்கள், ஜிஸ்டி கொண்டுவந்து விட்டோம் இனி ஒரு பைசா குறையாமல் வசூலிப்போம் என்கின்றார்கள்

அதுவும் செய்தாகிவிட்டது

இப்பொழுதுதான் தெரிந்ததாம், அடடே ரேஷனுக்கும், காஸ் மானியத்திற்கும் அள்ளிகொடுக்கின்றோமோ? அதனால் சிக்கலோ என நிறுத்துகின்றார்கள்

மிக சரியான நிர்வாகம் என்றால் இப்படி திணறாது, மாறாக என்ன செய்வதென தெரியாமல் தவிப்பில் ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து பார்க்கின்றார்கள், ஆனால் பலன் இல்லை

எல்லா திட்டமும் செயல்படுத்தியாயிற்று, கொஞ்சமும் மாறவில்லை

மரம் வெட்ட கூடாதாம், சீமை உடையும் புடுங்குவார்களாம், மரம் வளர்க்கவும் மாட்டார்களாம், எரிபொருள் மானியத்தையும் நிறுத்துவார்களாம்

தமிழக அரசுக்கு ஒரு சிக்கல் தீர்ந்தது, இனி எவனாவது மதுகடையினை மூடு என கிளம்பினால், மூடிவிட்டால் ரேஷன் கடைகளை நடத்தமுடியாது என அரசு கைவிரிக்கும், விடுவார்களா மக்கள்?

3 படி அரிசிக்காக காமராஜரையே தோற்கடித்த மாநிலம் 20 கிலோ அரிசியினை விடுமா? நெவர்.

மக்கள் தொகை எவ்வளவு பெருகிவிட்டது, விளை நிலம் எவ்வளவு பெருகியிருக்க வேண்டும்? வீடுகள் பெருகுமளவு நிச்சயம் உணவு உற்பத்தியும் பெருகியிருக்க வேண்டும்

ஆனால் வீடுகள் எல்லாம் விவசாய நிலங்களில் கட்டபட்டபின் எங்கிருந்து அரிசியும் நெல்லும் வரும்?

அரிசி அரசியல் நிச்சயம் நமது பிழை, ஆனால் காஸ் மானியம் என்பது நிச்சயம் அரசாங்க தவறு, விலை குறைந்திருக்கும் இந்த நேரத்திலும் மானியம் இல்லை என்பது சரியல்ல..

கறுப்புபணம் ஒழிந்துவிட்டது, கள்ள நோட்டு களையபட்டுவிட்டது, ஜிஎஸ்டி முறையால் வரி கொட்டுகின்றது என சொல்பவர்கள், மானியத்தை ஏன் குறைக்கவேண்டும்?

கச்சா எண்ணெய் விலையும், இயற்கை எரிவாயு விலையும் மிக சரிந்து கிடக்கும் இந்நேரத்தில் இந்த மானிய நிறுத்தம் எதற்காக என கேட்க கூடாது.

மோடி நிச்சயமாக நாட்டிற்கு ஏதோ செய்ய நினைக்கின்றார், ஆனால் அவருக்கு கீழிருக்கும் திட்டம் வகுப்பாளர்கள்தான் சரியில்லை,

ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கின்றார்கள், எதுவும் பெரும் பலன் கொடுக்கவில்லை

இப்பொழுது மானியத்தில் கைவைக்கின்றார்கள், இதுவும் நிச்சயம் பலனளிக்காது, அடுத்தது இன்னும் நிறுத்துவார்கள்.

இனி எதனை நிறுத்தபோகின்றார்களோ தெரியாது, அநேகமாக மக்களின் மூச்சாக இருக்கலாம்

அவர்கள் என்ன நிறுத்துவது, மக்களே இனி மூச்சை நிறுத்திவிடுவார்கள் போல..