கலைஞரின் அணுகுமுறை
அது அண்ணா கட்சி நடத்திய காலம், மிகவும் எதிர்பார்த்த ஒருவருக்கு அன்று சீட் கிடைக்கவில்லை அதைவிட முக்கியமான விஷயம் அவருக்கு பிடிக்காதவருக்கு சீட் கிடைத்தது
மனிதர் கொதித்து போய் அண்ணாவிடம் நியாயம் கேட்டார், தன் இயல்பான புன்னகையில் நிதானித்து சொன்னார் அண்ணா
“தம்பி ஒரு பெண்ணிடம் இரண்டு பட்டுசேலைகள் ஒரே நேரம் கிடைத்தால் பொங்கலுக்கு ஒன்று, தீபாவளிக்கொன்றாக கட்டுவாளா? இல்லை ஒரே நேரத்தில் கட்டுவாளா?
இன்று அவனுக்கொரு வாய்ப்பு கொடுத்தான் அண்ணன் உனக்கொரு வாய்பினை நாளை தரமாட்டேனா?
இதுதான் உன் நம்பிக்கையா? என்மேல் அன்பிருந்தால் உனக்கு இந்த சந்தேகம் வருமா? என் மனதில் உனக்கென உள்ள இடம் உனக்கு தெரியுமா? நான் உன்மேல் சந்தேகம் கொள்வேனா?”
அவ்வளவுதான்,கோபத்தில் வந்தவன் ஆனந்தத்தில் அழுதுகொண்டே சென்றுவிட்டான்
இதே பாணிதான் கலைஞருக்கும் இருந்தது, “தம்பி என் இதயத்தில் இடம் வேண்டாமா?” என அவர் உருக்கமாக கேட்டால் கலங்காதோர் யாருண்டு?
(ராமசந்திரன் பிரிந்தபொழுது, இருவரும் ஒருமுறை சந்தித்து பேசினால் நிலமை சரியாகும் என பலர் துடித்தனர், கலைஞர் தயாராக இருந்தார்
ஆனால் அவரை சந்தித்தால் தன் மனம் மாறிவிடும் அவர் பேச்சிலே அவரிடம் உருகிவிடும் என அஞ்சிய ராமசந்திரன் சந்திக்க மறுத்தார்..)
ஆம் கலைஞரின் அணுகுமுறை அப்படி இருந்தது
இப்படிபட்ட பக்குவபட்ட தலைவர்களால்தான் திமுக 60 ஆண்டுகளை கடந்தும், எத்தனையோ புயலடித்தும் நிலைத்து நின்றது
இப்பொழுது அப்படிபட்ட சுவாரஸ்யமான தலைவர்கள் எல்லாம் இல்லை
திமுகவிலாவது இப்படிபட்டவர்கள் அன்று இருந்தார்கள் மற்ற கட்சிகளில் என்றுமே இருந்ததில்லை..