கலைஞரின் அறிக்கை இல்லா முதல் புத்தாண்டு தொடங்கிவிட்டது

கலைஞரின் அறிக்கை இல்லா முதல் புத்தாண்டு தொடங்கிவிட்டது

இனி இப்படித்தான் தமிழகம் என்பதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்

ஆனால் அதனை கடந்து செல்வதுதான் மிக சிரமம்

திமுக ஏன் அமைதியாகிவிட்டது என பல குரல்கள், இதில் என்ன ஆச்சரியம் வேண்டி இருக்கின்றது?

திமுக எனும் கட்சிக்கு போர்குணம் கொடுத்ததே கலைஞர், சாதரண இயக்கமான அது கலைஞரின் எழுத்து,பேச்சு, போராட்டம் என்பதாலே உச்சம் தொட்டது

கல்லகுடி போராட்டம் முதல் எத்தனையோ போராட்டங்களை வெறும் எதிர்ப்பாக காட்டவேண்டிய இடங்களில் அதனை பெரும் நெருப்பாக அவர்தான் மாற்றினார்

அவரின் வாதம் நிறைந்த எழுத்தும், அர்த்தம் நிறைந்த பேச்சுக்களும் அதனை சாதித்தன‌

அவர் எழும்பினார், திமுக எழும்பியது

இதோ அவர் அமைதியாகின்றார், திமுக அமைதி ஆகின்றது

எத்தனையோ தலைவர்களையும், எத்தனையோ வித்தகர்களையும் அவர் உருவாக்கினார்

ஆனால் அவர் சாயலில் ஒருவரையும் அவர் உருவாக்கவில்லை என்பதுதான் இன்றைய அமைதிக்கு காரணம்

அவரின் போராட்ட குணத்தில் 100ல் ஒன்று இப்போதுள்ள திமுகவினரிடம் இருந்தால் கூட இன்று நிலை மாறி இருக்கும்

கால கொடுமை

இதுவே பழைய கலைஞர் களத்தில் இருந்தால் அடிக்கிற அடியில் தேர்தல் தேதி எப்பொழுதோ அறிவிக்கபட்டிருக்கும்

காலம் மகா விசித்திரமானது

நேருவையும், இந்திராவையும், காமராஜரையும், பக்தவக்சலத்தையுமே ஓட அடித்த திமுக இன்று சக இயக்கத்து பன்னீர்செல்வத்திடமும், சசிகலாவிடமும் முகம் கொடுக்க முடியாமல் திணறுகின்றது.


ஜெயா மரணத்தை நீதிபதி கொச்சைபடுத்த கூடாது, மருத்துவமனையிலிருந்து ஜெயா படத்தினை வெளியிட்டால் நன்றாக இருக்காது : வைகோ

முன்பொருகாலத்தில் உறுதிபடுத்தபடாத செய்தி உண்டு, அதாவது திமுகவிலிருந்து வைகோ வெளியேறும்பொழுது பல சக்திகள் அவருக்கு உதவின என்பது

இன்று நீதிபதி மீதே வைகோ சாடுவதற்கும், அந்த படம் வந்தால் நன்றாக இருக்காது என்பதும் பல சந்தேகங்களை உறுதிபடுத்துகின்றன‌

பொடோவில் இவர் உள்ளே இருந்ததும் ஒருவித புரிந்துணர்விலே இருந்திருக்கலாம்

மதிமுக கட்சியினை வளர்க்க எவ்வளவோ வாய்புகள் வந்தும் அவர் தட்டி கழித்த மர்மமும் விளங்கிகொண்டிருக்கின்றது

கழகத்தின் போர்வாள் என கலைஞர் கொண்டாடிய ஒருவரை, சிங்கமென இருந்த ஒருவரை, பின் அதனை வேட்டை நாயாக மாற்றி இருக்கின்றார்கள்.

அது கை காட்டிய இடங்களில் அன்று பாய்ந்துகொண்டிருந்தது,

இன்றோ அது பின்னாளில் ஆந்தையாக, கழுதையாக மாறிவிட்டதுதான் கால கொடுமை.


ஒரு சிவாஜிகணேசன் படம் ஓடிகொண்டிருக்கின்றது

கையில் டாஸ்மாக் பாட்டிலுடன் ஒரு தெய்வத்தின் முன்னால் சவால் விட்டுகொண்டிருகின்றார் சிவாஜி கணேசன்

“ஏய் தெயவமே உன்னை விட என் கையிலிருக்கும் பாட்டிலுக்குத்தான் சக்தி அதிகம்

உனக்கு இருக்கும் கோயில்களை விட என் கையில் இருக்கும் பாட்டிலுக்குத்தான் கடைகள் அதிகம் ஹா.ஹா.ஹ்ஹா”

இருக்கலாம்

இதனால்தான் கடவுள் இல்லை என சொன்ன திராவிட கட்சிகள் மதுவின் சக்தி தெரிந்து அத்தனை மதுகடைகளை தமிழகத்தில் திறந்திருக்கலாம்..