கலைஞரின் சூட்சும முடிச்சுகள் மகா அபாரமானவை

Image may contain: 5 people, people standing

கலைஞரை பற்றி ஒரு விஷயம் நீ மறுக்கவே முடியாது, அது அவரின் கபடநாடகம், ஆம் அந்த வைரவேல் கொலைக்காக நடைபயணம் நடந்தவர், விசாரணை கமிஷன் அறிக்கையினையே ராமசந்திரனுக்கு முன்பே அசாத்தியமாக கைபற்றி படித்தவர் என்றேல்லாம் போராடிய கலைஞர், பின் முதல்வராகும்பொழுது ஏன் அமைதியானார்?

அவர் சுயநலவாதி, அவர் காரியகாரர் நீ இதனை ஒப்புகொண்டே ஆகவேண்டும் என சிலர் கேட்கின்றார்கள்

கலைஞரின் சூட்சும முடிச்சுகள் மகா அபாரமானவை. வைரவேல் விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரியாதது அல்ல, உலகமே அறிந்தது

ஆனால் அன்று பெயர் அடிபட்டவர்களில் ஆர்.எம் வீரப்பனும் ஒருவர்

Image may contain: 1 personஅன்று ஆர்.எம் வீரப்பன் ராமசந்திரனை இயக்கி கொண்டிருந்தார், ராமசந்திரன் உடல்நிலை மோசமாகிகொண்டே இருந்தது

அடுத்த தலைவர் ஆர்.எம் வீரப்பன் என்றொரு நிலை பரவாலாக ஏற்பட்டுவிட்டது, கிட்டதட்ட செயல்தலைவர் பதவியினை எட்டியிருந்தார்

கட்சி அவருக்கு கட்டுபட்டே இருந்தது, அடுத்தது நாமே என ஆர்.எம் வீரப்பனும் திடமான நம்பிக்கையில் இருந்தார்

திருச்செந்தூர் விவகாரத்தில் அவர் பெயர் சிக்கியதும் கலைஞர் துடித்தெழுந்து பெரும் பரபரப்பினை ஏன் ஏற்படுத்தினார், எதற்காக அடுத்த தலைவராக உருவாகிகொண்டிருந்த ஆர்.எம் வீரப்பனை அடக்குவதற்காக‌

அட்டகாசமாக அத்திட்டம் வேலை செய்தது, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினார் ஆர்.எம் வீரப்பன், பெரும் அரசியலை அவர் செய்யவில்லை. கைகளை கட்டி போட்டது பல பம்மினார்

அச்சிக்கல் மட்டும் இல்லாவிட்டால் மிக அனாசயமாக அதிமுகவினை கைபற்றியிருப்பார் ஆர்.எம் வீரப்பன்

வீரப்பன் திணறி கட்சிக்குள் பிரிவு வந்தபொழுதுதான் தேர்தல் வந்து கலைஞர் ஆட்சிக்கும் வந்தார்

ஆனால் கலைஞர் அரியணை ஏறவிரும்பாத டெல்லி காங்கிரஸ் ஜெயலலிதாவினை வளர்த்து ஆர்.எம் வீரப்பனை வெளியேற்றி என்னவெல்லாமோ செய்து இறுதியில் ராஜிவ் கொலையால் ஜெயா ஆட்சிக்கும் வந்தார்

கலைஞரின் குறி தப்பவில்லை, பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த ஆர்.எம் வீரப்பன் அரசியலை விட்டு விலகினார், ஆனால் டெல்லி சூழ்ச்சியால் ஜெயா என்ற பிம்பம் உருவானது இது கலைஞர் எதிர்பாராதது

பின் 1997ல் கலைஞர் தொடுத்த வழக்குகளுக்கு ஜெயா சாகும்வரை தீர்ப்புவராமல் டெல்லி பார்த்துகொண்டது

இப்பொழுது அதே திமுகவில் 1987ல் நடந்த அதே குழப்பங்கள் நடக்கின்றன, அன்று ஆர்.எம் வீரப்பன் ஒதுக்கபட்டது போல இன்று சசிகலா குடும்பமும் ஒதுக்கபடுகின்றது

இரண்டிற்கும் விதை போட்டது யாரென்றால் அதுதான் கலைஞர், அவரை ஏன் அரசியல் சாணக்கியன் என்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான்

இதே ஆர்.எம் வீரப்பன் பாட்ஷா படவிழாவில் ரஜினியினை பேச வைத்து அவரை அரசியலுக்கு இழுத்து விட கணக்கு போட கொஞ்ச நாளிலே மூப்பனார் மூலம் ரஜினியின் வாய்ஸ் கிடைக்க வைத்து ஆர்.எம் வீரப்பன் மறுபடியும் வராமல் பார்த்துகொண்டவர் கலைஞர்

இப்படி எல்லாம் எதிர்கட்சிகளில் அடுத்த தலைவர் யார்? யாரை குறிவைத்தால் யாரை வீழ்த்தலாம் என்ற மிகுந்த ராஜதந்திரத்தோடு இருந்த கலைஞருக்கு தன் கட்சியினை தனக்கு பின் நடத்த தகுதியான நபர் யார் என தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்

அது இருக்கட்டும், வைரவேல் தொடர்பாக அமைக்கபட்ட‌ கமிஷன் என்ன கண்டுபிடித்தது அதன் முடிவு என்னவென்று கேட்டால், ராமசந்திரன் செய்த மதுக்கடை ஊழல் தொடர்பாக அமைக்கபட்ட ரே கமிஷன் என்ன முடிவுக்கு வந்ததோ அதே முடிவுதான்