கலைஞரின் செயலாளர் சன்முகநாதனின் பேட்டி
கலைஞரின் செயலாளர் சன்முகநாதனின் பேட்டி ஒன்று தி இந்து பத்திரிகையில் வந்திருக்கின்றது
கலைஞருக்கு நிழலாக இருந்தவர் சன்முகநாதன், கலைஞர் சொல்ல சொல்ல எழுதியவர் அவர், கலைஞர் இருக்குமிடமெல்லாம் அவர் இருந்தார்
எத்தனையோ சிக்கலான காலங்கள் வந்தபொழுதெல்லாம் அவர் வாய் திறக்கவில்லை, கலைஞரோடு இருக்கின்றார் என்ற காரணத்திற்காக அவர் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல
அப்பொழுதெல்லாம் வாய் திறக்கா சன்முகநாதன், கலைஞர் அமைதியான இக்காலங்களில் வாய்திறக்கின்றார்
உறுதியாக சொல்லலாம் கலைஞரின் மனம் அறிந்தவர்களில் முரசொலிமாறன் போல அவரும் ஒருவர்
அந்த சன்முகநாதன் சில விஷயங்களை சொல்லியிருக்கின்றார், அதில் ராமசந்திரன் கட்சி தொடங்கிய விதமும் இருக்கின்றது.
முடிந்தால் படியுங்கள், சுவாரஸ்யமான வரலாறு அது.
இதனைத்தான் நாம் அன்றே சொன்னோம், இந்தியாவில் முதன் முதலாக மாநில கட்சியாக ஆட்சியினை பிடித்தது திமுகதான், அந்த எழுச்சி இந்தியா முழுக்க எதிரொலித்தது
அதன் பின் திமுகவினை பலகீனபடுத்த, டெல்லி எடுத்த கோடாரி காம்புதான் ராமசந்திரன்
அதுவும் சிரஞ்சீவி ஸ்டைலில் ராமசந்திரன் காமராஜர் பக்கம் செல்லத்தான் ஸ்கெட்ச் போடபட்டது, அதாவது காங்கிரசை வலுபடுத்த
காமராஜருக்கு அதில் விருப்பமில்லை, என் சேவைக்காக விழாத வோட்டு, ராமசந்திரன் முகத்திற்காக கிடைக்குமென்றால் வேண்டாம் என பீஷ்மர் சிகண்டியினை எதிர்த்தது போல் நின்றார்
டெல்லி காமராஜர் விரோதம் இதில்தான் தான் தொடங்கியது
இதனை கணித்த ராமசந்திரன் பதிலுக்கு பெப்பே காட்டி, தமிழகத்தில் இருந்த காங்கிரசையும் இல்லாமல் செய்தது வேறுவிஷயம்
திமுகவில் ஒரு பங்கை உடைத்து, அதனை ஆயுதமாக்கி திமுகவினை இல்லாது செய்ய டெல்லி போட்ட திட்டம் அதற்கே வினையானது
பின் ராமசந்திரனும் , கலைஞரும் 1979ல் இணைய திட்டமிட்டபொழுது , முதலில் சம்மதித்த ராமசந்திரன் பின் அலறி அடித்து ஓடியது ஏன் என இன்றுவரை தெரியாது
டெல்லிக்கு பயந்து அதே நேரம் அவர்கள் கைபாவவையாக ஆண்டார் ராமசந்திரன், “முதல்வர் நான் தான், ஆனால் உத்தரவு அவர்களுடையது..” என்ற பாணி அது.
ராமசந்திரன் மறைவுக்கு பின் அதிமுகவினை அழிக்க எண்ணியது டெல்லி, இரட்டை இலையினை மறைத்து ஆட்டம் காட்டியது
ஆனால் நடராசன் மிக திறமையாக ஆடி இரட்டையிலையினை மீட்டெடுத்து அதிமுகவினை ஸ்திரபடுத்தினார்
அதன் பின் டெல்லி கோபம் முழுக்க சசிகலா மீது திரும்பியது, சசிகலா இருக்கும் வரை அதனை அழிக்க முடியாது, நெருங்க முடியாது என உணர்ந்தது டெல்லி
விளைவு, சசிகலா குடும்பம் மீது இருந்த பலகீனமான பக்கங்களில் வழக்கு தொடுக்கபட்டது, அதோடு ஒட்டியிருந்த ஜெயலலிதா மீதும் ஒப்புக்க்கு குற்றம் சாட்டபட்டதே தவிர, முழுக்க அல்ல
அன்றே சிறையில் அடைக்கபட்டு படாத பாடுபட்டார் சசிகலா, ஒரே காரணம் சசிகலா அணி இருக்கும் வரை அதிமுகவினை அசைக்க முடியாது எனும் பயம்
டெல்லியின் சூழ்ச்சிகளை முறியடித்து மறுபடியும் வெற்றிமுகம் காட்டியது நடராசன் கோஷ்டி, ஆம் அந்த உண்மையினை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்
1967ல் வைக்கபட்ட குறியில் ராமசந்திரன் உருவானார், 1977ல் ராமசந்திரன் முதல்வரானார், 1987ல் அதிமுகவினை அழிக்க வைக்கபட்ட குறி நடராஜனின் ஆட்டத்தாலும் ராஜிவின் மரணத்தாலும் இலக்கு தவறியது
1997ல் வைக்கபட்ட வழக்குகள் எனும் ஆயுதம் சசிகலாவினை முடக்க முடியவில்லை
இப்பொழுது 2017ல் அதே நிலை வந்திருக்கின்றது, அதே இரட்டை இலை முடக்கம், அதே சிறை காட்சிகள் இன்னபிற
காங்கிரஸ், பாஜக் என கட்சிகள் மாறுமே ஒழிய, தமிழகத்தில் எப்படி நுழையலாம் எனும் ஒரு கூட்டம் போட்டு கொடுக்கும் திட்டம் மாறவே மாறாது .
ஆக அதிமுகவினை உருவாக்கிவிட்டு அதனை உருதெரியாமல் அழிக்க படாத பாடுபட்டுகொண்டிருக்கின்றது டெல்லி
சசிகலா மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் அதிமுக என்ற கட்சியினை அவர்தான் நடத்த முடியும். அக்குடும்பம் அல்லாது இனி அமையாது அதிமுக, இதுதான் யதார்த்தம்
ஆக என்றோ குறிவைத்த சசிகலாவினை இன்று விரட்டிவிட்டு சில காட்சிகள் நடக்கின்றன, முழுவெற்றி என்ற நிலை இல்லை, அது வராது, இனி நடப்பதை காலம் காட்டும்
இந்த பழனிச்சாமி, பன்னீர் எல்லாம் நம்ப முடியாத ரகம், நாளையே ஆட்சி போனால் சின்னம்மா என ஓடி சென்று ஒட்டிகொள்வார்கள் என்பது வேறு விஷயம்
இது அதிமுக டெல்லி சண்டை
திமுகவினை எதிர்க்க அதிமுகவினை தொடங்க வைத்த டெல்லி இப்பொழுது அதிமுகவுடன் என்ன பாடு படுகின்றது என்பது மேற்கண்டது.
திமுக அந்த தலைவனின் அற்புத வழிகாட்டலில் இயங்கியது, இந்த வைகோ போன்றோரின் பிளவுகள் எல்லாம் கொஞ்சமும் பாதிக்கவில்லை
ஸ்பெக்ட்ரம் வழக்கு எப்படி வந்தாலும் அது திமுகவினை கொஞ்சமும் பாதிக்காது.
இன்று அதிமுகவினை மிரட்டி உருட்டி பல்லக்கு தூக்கிவிட்டோம் என சொல்லிகொண்டிருக்கும் டெல்லிக்கு திமுக என்பது தமிழகத்தில் சிம்ம சொப்பணம்
எப்படி பார்த்தாலும் டெல்லி கண்களை விரலை விட்டு ஆட்டி, அதற்கு மிகபெரும் பயத்தை கொடுத்தது திமுக என்பதை மறுக்க முடியாது.
அந்த பயத்தை உண்டாக்கிவிட்டுத்தான், நான் வாய்திறந்தால் என்னாகும் தெரியுமா? என்ற ஒரு பயத்தை உண்டாக்கிவிட்டுத்தான் ஓய்வில் இருக்கின்றார் கலைஞர்
அதிமுக அழியவேண்டும் என நினைத்தவர் அல்ல கலைஞர், அதிமுக தன் தாய்கழகத்தோடு இணையவேண்டும் என்ற ஏக்கமே அவரிடம் இருந்தது
அந்த சன்முகநாதனின் வரிகள் ஒவ்வொன்றும் நிதர்சனம்