கலைஞரின் நகர்வுகள் அறிவார்ந்தவை

ஈழம் பற்றி என்ன சொன்னாலும் யோசிக்காத அல்லது யோசிக்க விரும்பாத சில கோஷ்டிகள், யோசிக்க அறிவில்லாத கோஷ்டிகள் இறுதியில் பிடித்துகொள்வது அவர் ஏன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்? இருக்காமல் போனால் என்ன?

அடேய் பதர்களா, உங்களுக்கு நோக்கமெல்லாம் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பது, அது பழனிச்சாமி பிரதமர் ஆவதை போல முடியாத விஷயம் என்பது கலைஞருக்கு தெரியாதா?

ஆனால் அவனிடம் சிக்கிய மக்களை காப்பாற்ற முயன்றார், தன்னால் முடிந்தவரை ஒரு அவகாசம் கொடுத்தார்

அந்த உண்ணாவிரதத்தின் அர்த்தம் “ஏய் மூடனே பிரபாகரா, உன்னை காப்பாற்ற முடியாது ஆனால் அந்த மக்களை விட்டுவிட அவகாசம் கிடைக்க என்னால் முடிந்ததை செய்கின்றேன்” என்பது அது.

அந்த உண்ணாவிரதத்தின் பொருள் அதுவேதான்

உங்களுக்கெல்லாம் பாகுபலி வசனம்தான் சரி

“ஒரு நல்ல அரசனுக்கு அழகு எத்தனை பேரை கொன்றான் என்பதல்ல, எத்தனை பேரை காப்பாற்றினான் என்பதே..”

கலைஞர் காப்பாற்ற முயன்ற நல்ல அரசன், அந்த‌ பிரபாகரன் எத்தனை உயிர் போனாலும் தன் உயிர் காக்கபட வேண்டும் என்ற சுயநலத்தின் மொத்த உருவம்

கலைஞரின் நகர்வுகள் அறிவார்ந்தவை அதை புரிந்துகொள்ள அறிவு வேண்டும்

அவர்களிடம் அது என்று இருந்தது? இருந்தால் ஏன் அவர்கள் அந்த மடையன் கும்பலில் தும்பிகளாக இருக்க போகின்றார்கள்?