நனவாகும் கலைஞரின் நினைவுகள்….

Image may contain: 1 person, sitting and indoor

ஸ்பெக்டரம் வெற்றி கொண்டாட்டம் என திமுக நடத்திகொண்டிருக்கின்றது, அந்த விவகாரத்தில் வலி அதிகம் அதனால் வெற்றிகுரலும் அதிகமாக இருப்பதில் வியப்பில்லை

இன்று சோகம் எல்லாம் கடந்த ஆரவார நிலை, ஆனால் தொடக்கம் அப்படி அல்ல‌

ஆளாளுக்கு எழுதினார்கள், ஒருவன் கிட்டதட்ட 2 லட்சம் கோடியினை கலைஞர் வீட்டில் அடுக்கி வைத்தார் என்றான், இன்னொருவன் இந்தோனேஷியாவின் 15 ஆயிரம் தீவில் 5 ஆயிரம் தீவினை கனிமொழி வாங்கிவிட்டார் என்றான்

இது 4லட்சம் கோடி அமுக்கிய வழக்கு என்றார்கள் திடீர் பொருளாதார நிபுணர்கள், அவர்கள் 5ம்வகுப்பு தாண்டியவர்களா என்றால் இல்லை

எல்லா ஊடகங்களும் கட்டுகதை பின்னிய நேரம், வழக்கம் போல் முரசொலியில் தன் சோகத்தை பேனாவால் பகிர்ந்தார் கலைஞர், அதுவும் அவருக்கே உரித்தான நயத்தில் இப்படியாக‌

“இவர்கள் செய்யும் காரியங்களை எல்லாம் பார்க்கும்பொழுது, தந்தை முத்துவேலருடன் அக்காலத்தில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த நினைவு வருகின்றது

அன்று படம் மட்டும் ஓடும், இசையும் குரலும் சேர்ந்து வராது. பின்னால் இருந்து ஒருவன் காட்சியினை ஒலிபெருக்கியில் விளக்குவான்

அப்படி அன்று பார்த்த படத்தில் பராகசுரன் என்றொருவன் திரையில் வந்தான், காட்சியினை விளக்குபவனோ பாருங்கள் அசுரனின் பல் 10 அடி நீளம், கால் 50 அடி உயரம் அவன் எடை பல்லாயிரம் கிலோ, அவன் தலைமுடியிலே ஊஞ்சல் கட்டலாம், அவன் கையால் அடித்தால் மலை உடையும்” என்றெல்லாம் பேசிகொண்டிருந்தான்

இந்த நபர் அந்த அசுரனை கண்டவனா? என்றாவது அவனை அளந்து பார்த்தவனா என்றால் இல்லை, அவன் போக்கிற்கு திரையரங்கு மக்களை ஏமாற்ற என்னவோ சொல்லிகொண்டிருந்தான்

இவர்கள் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு அளவுகளை, பொய்களை சொல்ல சொல்ல அந்த டூரிங் டாக்கீஸில் கதை சொன்னவன் நினைவுதான் வருகின்றது

உடன் பிறப்பே இவர்கள் எவ்வளவு நேரம் சொல்லமுடியும்?

அந்த திரையரங்குகாரன் படம் முடியும் வரைதான் சொல்லமுடியும் அந்த பொய்யின் வாழ்வு அவ்வளவுதான்

அதனை போல இந்த எதிரிகள் இவ்வழக்கு முடியும்வரை சொல்லலாம் அவ்வளவுதான் இப்பொய்யின் வாழ்வு

படம் முடிந்து கிளம்பும்பொழுது எல்லாம் மாயை என மக்கள் உணர்ந்து சென்றது போல, இவ்வழக்கு முடியும்பொழுது இப்போது சொல்லபட்ட கதைகள், படுபயங்கர கற்பனை பொய்கள் எல்லாம் மோசடி 
பொய் என வையகம் உணரத்தான் போகின்றது

அதனை உன்னோடு சேர்ந்து நானும் காணத்தான் போகின்றேன் உடன்பிறப்பே..”

அவர் சொன்னது அப்படியே நடந்திருக்கின்றது..