கலைஞரை சீண்டிய பெண்மணி

Image may contain: 1 person, textஅந்த பெண்மணி கலைஞரை சீண்டியது தவறாக இருக்கலாம், ஆனால் சுறா எனும் விஜய்படத்தை பற்றி சொன்னது தவறாகவே இருக்க முடியாது.

ஒரு மரணதண்டனை கைதிக்கு அடிக்கடி போட்டு காட்டி அவனை சாகடிக்கும் வகையில் வைக்க வேண்டிய படம் அது.

உண்மையினை ஒப்புகொள்கின்றாயா? இல்லை 10 முறை சுறா படம் போட்டு காட்டுவோம் என காவல்துறை கையாள வேண்டிய கொடூர உத்திகளில் ஒன்று அந்த படம்.

ஐ.எஸ், அல்கய்தா போன்ற குற்றவாளிகளிடம் உண்மையினை கண்டுபிடிக்க அமெரிக்க ராணுவமே அதனை பயன்படுத்த வாய்பிருக்கின்றது. கத்தியின்றி, ரத்தமின்றி அப்படி ஒரு சித்திரவதைக்கு சுறா படத்தை விட்டால் உலகில் வழியே இல்லை.

Image may contain: 2 people, people smilingஅதனை பற்றி உலகிற்கே தெரிந்தபின், இந்த விஜய் ரசிகர்கள் பொங்குவதில் என்ன இருக்கின்றது?

அந்த அளவு சுறா அவர்களை கடித்து குதறியிருக்கின்றது என்பதுதான் நிஜம், அதனை ஏன் நினைவுபடுத்துகின்றாய் என பொங்கியிருக்கின்றார்கள்.

“சுறா” என்பது வெகு கொடூரமான, பார்த்தவரை ரத்த வாந்தி எடுக்க வைக்கும் அதிபயங்கர படம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், “படகோட்டி” எனும் ராமசந்திரனின் படத்தை விட அவ்வளவு கொடூரமெல்லாம் இல்லை