கலைஞரை போற்றுகின்றோம் என பழங்கதைகளை கிளறுகின்றார்கள்

கலைஞரை போற்றுகின்றோம் என சொல்லி மகா அபத்தமாக அவரின் பழங்கதைகளை கிளறுகின்றார்கள் உபிக்கள்

என்ன சொல்கின்றார்கள்? 1942ல் இந்த பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் எல்லாம் பேருந்து செலவுக்கு பணமின்றி இருந்தார்களாம், கலைஞர் அவர்களை அழைத்து பேசவைத்து வழிசெலவுக்கு 5 ரூபாய் கொடுத்து, பழங்கஞ்சி கொடுத்து அனுப்பினாராம்

இந்த அன்பழகனும் , நெடுஞ்செழியனும் ஆனந்த கண்ணீர் வடித்துகொண்டே சென்றார்களாம்

அன்று இவர்கள் அன்பழகன் அல்ல, ராமையா. நெடுஞ்செழியனின் பெயர் நாராயணசுவாமி இவர்கள் பெயரை மாற்றியது எல்லாம் பிற்காலத்தில்

1942களில் கலைஞர் நிலை எப்படி இருந்தது என்பதை அவரின் நெஞ்சுக்கு நீதியிலே பார்க்கலாம்

“அது பெரியாருக்கு கீழ் பணியாற்றிய காலம், சொற்ப சம்பளத்தில் ரூபாய் சம்பளத்தில் உணவு, தங்குமிடம் என பலதும் போய் என்னை நம்பி வந்த பத்மாவதிக்கு (முக முத்து தாயார்) மாதம் 3ரூபாய் அனுப்புவதே பெரிய விஷயம்

காலையில் பம்புசெட்டிற்கு குளிக்க சென்றால் மாற்று உடைக்காக‌ இருக்கும் இன்னொரு வேட்டியினை துவைத்து அப்படியே தலைக்கு மேல் பிடித்து வருவது வழக்கம், அப்படி இருந்தது வறுமை”

ஆக 1940களில் கலைஞரே தடுமாறி கொண்டிருந்த காலம், அவருக்கான உச்சகாலம் 1946க்கு பின்னரே தொடங்கிற்று

உண்மை இப்படி இருக்க பெரியாருக்கு கீழ் பாடாய்பட்ட காலத்திலே அவர் அன்பழகனுக்கும், நெடுமாறனுக்கும் வழிசெலவுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு இருந்தாராம்

எவ்வளவு பொய்கள்..