கலைஞரை வைகோ சந்தித்துவிட்டாராம்…

கலைஞரை வைகோ சந்தித்துவிட்டாராம், நலம் விசாரித்தாராம் , இதனை எல்லாம் விட சொல்லபட வேண்டிய விஷயம் வைகோ பொடாவில் இருந்தபொழுது கலைஞர் சென்று பார்த்தது அதன் பின்னும் வைகோ ஜெயா பக்கம் இருந்தது

இப்படியாக கலைஞர் அணைப்பதும், வைகோ அத்துகொண்டு போவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் வைகோவின் எட்டுகட்டை பேச்சு ஜெயாவின் ரசிப்பால் 9 கட்டை ஆனது

பொறுத்து பார்த்த கலைஞர் பேனாவினை எடுத்தார்

“ஆங்கோர் காட்சி கண்டேன்
அம்மை ஒன்று தொட்டிலாட்டி தாலாட்டு பாடியது 
மதிமுக மகன் பிறந்தான் தன்னை காப்பான் 
என மகிழ்ந்து பாடியது அம்மை

அம்மையே நீர் தாலாட்டுவது குழந்தையினை அல்ல, அம்மிகல்லை”

என சீறிவந்தது முரசொலி. அந்த கவிதை இப்பொழுது எங்கு கிடைக்கும் என தெரியவில்லை, கிடைத்தால் வைகோவிற்கு கொரியர் செய்துவிடலாம்