கலைஞர் அஞ்சலி என ரஜினி எதற்காக உருகினார்

ரஜினி கலைஞர் பற்றி பேசினார், இன்னும் பேசுவார் அது அவரின் விருப்பம் அல்லது கூட்டத்தில் பேச சொன்னால் பேசி ஆகவேண்டிய கட்டாயம், பேசினார்

என்ன பேசினார்?

காலையில் ராஜாஜி ஹாலில் கூட்டமில்லை எனக்கு தமிழக மக்கள் மேல் கோபம் வந்தது, ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுகடங்காமல் போனது தமிழரின் நன்றியினை பார்த்து கண்ணீர் வந்தது என பேசினார்

இது சில ஈழபதர்களுக்கு பிடிக்கவில்லையாம்

நீ எப்படி தமிழர் மேல் கோபடலாம் உடனே வெளியேறி கன்னடம் போ என பொங்குகின்றார்கள்

இவர்கள் யாரென பார்த்தால் இலங்கையில் இருக்கமுடியாமல் ஓடி அடைக்கலமானவர்கள்

இவர்கள் இந்தியரான ரஜினியினை இந்திய மாகாணமான தமிழகத்திலிருந்து வெளியேற சொல்ல கொஞ்சமும் அருகதையோ தகுதியோ உரிமையோ அற்றவர்கள்

ஒரு இந்தியனை இந்திய மாநிலத்திலிருந்து வெளியே போ என சொல்ல அயல்நாட்டு அகதிகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது

தும்பிகள் பலவகை ஒவ்வொன்றும் ஒரு கிறுக்கு வகை


கலாநிதி மாறன் படத்தில் நடிக்கின்றார் ரஜினி என்பது தெரிந்த விஷயம்

கலைஞர் அஞ்சலி என ரஜினி எதற்காக உருகினார் என்றால் விஷயமும் அதுதான் என்பதுதான் தெரியாத விஷயம்

கலைஞர் வாழும் காலமெல்லாம் அவருக்கு ஆறுதலாக இருந்தவர் அல்ல ரஜினி, 1996 காட்சிகள் கூட மூப்பனாருக்கே ஆதரவானவை

அதன் பின் ஜெயா இவரை ஓட அடித்தும் , எங்காவது மூலையில் இருந்து ஜெயா இருக்கும் கூட்டணிக்கு எனது வோட்டு என சொல்லாமல் சொல்லிகொண்டிருந்தவர்

பாபா படத்தில் இப்போ ராமசாமி என கலைஞரை ரஜினி கலாய்த்ததை யாரும் மறக்க முடியாது, படத்தி தோல்விக்கு அதுவே காரணம்

இன்று கலைஞர் இல்லா நிலையில், கலாநிதி மாறனின் படத்தில் கமிட் ஆகி இருப்பதால் உருகி உருகி நிற்கின்றார் ரஜினி

கொஞ்ச நாளைக்கு முன்புதான் எம்ஜி ராமசந்திரன் வழியில் தன்னால் நல்லாட்சி தரமுடியும் என சொன்ன ரஜியினை நாம் மறந்திருக்க முடியாது

அவரின் சுபாவம் அப்படி

ரஜினி பற்றி ஏற்கனவே கலைஞர் சொன்னது கவனிக்கதக்கது

என்ன சொன்னார்?

ஒரு தேர்தலில் தான் இரட்டை இலைக்கு வாக்களிப்பதை பகிரங்கமாக காட்டினார் ரஜினி

கலைஞர் சொன்னார் “வாக்களிப்பது அவர் விருப்பம், அதை இப்படி பகிரங்கமாக சொன்னபின் இந்த மனிதரிடம் என்ன நம்பகதன்மை இருக்கின்றது, எப்படி இவரை நம்ப முடியும்?”

ரஜினி எந்நாளும் பாஜக ஆதரவாளர் என்பதில் சந்தேகமில்லை, இந்த கூத்துக்களெல்லாம் பாஜக திமுக கூட்டணிக்கு அவரால் முடிந்ததை செய்ய விளைகின்றாரே அன்றி வேறல்ல‌


கலைஞரின் பேச்சிலும், எழுத்திலும் அரசியல் கற்று என் ஆளுமையினை வளர்த்துகொண்டேன் : தமிழிசை

100 வயது வரை வாழவேண்டிய கலைஞர் என் 94 வயதிலே சென்றுவிட்டார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

அம்மணி அவரிடம் இதை நேரடியாக சொல்லி இருக்கும் போல அதன் பின் கலைஞர் பேச

விரும்பாமலே இருந்திருக்கலாம் , அப்படியே காவேரிக்கும் சென்றிருக்கலாம்