கலைஞர் அமைதியானார், எல்லாம் அடங்கிபோயிற்று
ராஜாஜியின் கல்வி திட்டத்தை, குல கல்வி திட்டம் என பெயர்வைத்து போராடி, அவர் ஆட்சியினையே விரட்டி உரிமைகளை காத்த தமிழகம் இது
இன்று நீட் தேர்வால் மாணவர் தற்கொலை அளவு நிலமை சென்றாலும் பெரும் எதிர்ப்பு ஏதுமில்லை
திமுகவினை அடக்கினால் தமிழக உரிமை குரல்களை அடக்கலாம் என டெல்லி அன்றே திட்டமிட்டது மிக சரியான கணக்கு என்பதை காலம் சொல்லிற்று.
பெரியார் , அண்ணா, கலைஞர் வரிசையில் ஒருவரும் உருவாகி வராததும் தமிழக சோகம்..
பெரியார் இறந்தார் திராவிட குரல் ஓயவில்லை, அண்ணா மறைந்தார் கொஞ்சமும் சுணக்கமில்லை
கலைஞர் அமைதியானார், எல்லாம் அடங்கிபோயிற்று