கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா?
கலைஞர் நிச்சயம் போராளி, அவரின் உழைப்பும், சாதுரியமும், தமிழும் இன்னபிற சிறப்பு குணங்களும் யாருக்கும் வராது
நிச்சயம் தமிழகத்து அரசியல்வாதிகளில் பெரும் இடம் பெற்றவர், அது மாறாது
ஆனால் கலைஞர் இந்நாட்டின் தேசியவாதியா? இந்நாட்டை தாங்கி நின்றவரா? இந்நாட்டிற்கு பெரும் சேவை செய்தவரா என்றால் இல்லை என்றே பதில்வரும்
இம்மாநிலத்தை தேசியத்துடன் ஒட்டவிடாமல் திராவிடம் தமிழ் தமிழர் என சொல்லிகொண்டே ஒருமாதிரி இழுத்து சென்ற அரசியல் அவருடையது
அதன் எதிரொலிதான் நாம் என்ன செய்தாலும் கலைஞர் காப்பார் என பல படுகொலைகளை இம்மண்ணில் புலிகள் செய்ய துணிந்தது
கலைஞரும் தேச அரசியலில் ஒட்டாமலே தவிர்த்துதான் வந்தார், பின்பு அதிமுகவினை முடக்க தேசிய கட்சிகளோடு சாதுர்ய கூட்டணி வைத்தாரே அன்றி, நாட்டு நலனில் எல்லாம் அல்ல
ஜனாதிபதி பதவியினை ஏற்றால் கூட பின்னாளில் மாநில அரசியல் செய்யமுடியாது என சாதுர்யமாக தவிர்த்தவர் அவர்
டெல்லி அரசில் இடம்பெறும்பொழுதெல்லாம் அவரின் சுயநலத்தில் பொதுநலமும் , பொதுநலத்தில் சில சுயநலமும் கலந்தே இருந்தது.
மாநில அளவில் கலைஞரை கொண்டாடலாம், ஆனால் தேசிய அளவில் அவரை பெரும் தலைவர், காமராஜர் காந்தி வரிசை என சொன்னால் அதற்கு விமர்சனம் வந்தே தீரும்
உண்மையான தேசாபிமானிகளுக்கு கலைஞர் என்பவர் மனதால் நெருக்கமானவர் அல்லவே அல்ல