கலைஞர் இருக்கட்டும், ஆனால் பேசா கலைஞராக இருக்கட்டும் என்ற முடிவோ என்னமோ?
அந்த சலசலப்பு ஆங்காங்கே எழுந்தது, நேற்று பல இடங்களில் பெரும் குரலாகவே கேட்டது
அதாவது ஏன் கலைஞருக்கு வெளிநாட்டு சிகிச்சைகள் அளிக்கவில்லை, அல்லது வெளிநாட்டு மருத்துவகுழுவினை வரவழைக்கவில்லை
முதிய வயதுதான் சந்தேகமில்லை, ஆனால் மலேசியாவின் மகாதீர் போல ஒரு மெடிக்கல் மிராக்கிள் கலைஞர்
அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் கூட நோயில் விழுந்ததில்லை, விபத்துக்களில் சிக்கிய காலம் தவிர அவர் அவராகவே இருந்தார்
அவர் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுள் ஒருவரம் அவரின் இரு சகோதரிகளும் 95 வயதை முழு நினைவாற்றலுடன் கடந்தனர்
கலைஞருக்கும் அந்த வரம் உண்டு, ஆனால் அவர் உடல்நலம் இயற்கையாய் இருந்ததே தவிர அதை கண்காணிக்க பெரும் நேரம் அவர் ஒதுக்கவில்லை
70 வயதுகளில் வெளிநாட்டில் செய்யவேண்டிய முழு உடல் பரிசோதனையினையும் அவர் தள்ளிபோட்டே வந்தார், நிச்சய்ம் 80 வயதிலாவது செய்திருக்க வேண்டும் செய்யவில்லை
காரணம் தெரியவில்லை
இப்பொழுதும் காவேரி மருத்துவமனை என்கின்றார்கள் , ஸ்டெஸ்கோமி என்கின்றார்கள் , ஏதோ சொல்கின்றார்களே தவிர வெளிநாட்டு மருத்துவகுழுவினை அழைத்ததாகவோ உயர் சிகிச்சை கொடுத்ததாகவோ தகவல் இல்லை
பணம் நிச்சயம் காரணமாக இருக்கமுடியாது, அவருக்கு அப்படி சிகிச்சை கொடுக்க பணமில்லை என்றால் உலகம் சிரிப்பாய் சிரிக்கும்
அப்படி இல்லை என சொல்லி தொலைத்தால் கூட கொட்டி கொடுக்க தமிழகம் ரெடி
ஆனால் ஏன் செய்யவில்லை என்பதுதான் தெரியவில்லை, செய்திருக்கலாம்
அந்த உருக்கமான குரலை மறுபடியும் கேட்க வைத்திருக்கலாம்
முடியாமல் போல ஸ்டீபன் ஹாக்கின்ஸுக்கு கூட எத்தனையோ நவீன விஞ்ஞான வசதிகளை உருவாக்கி பேச வைத்து, எழுத வைத்து பயன்படுத்திகொண்டது மேல்நாடுகள்
கலைஞருக்கும் அதனை செய்திருக்கலாம், ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை
இதற்கு மேல் கேட்டால் ஏய் ஆரிய அடிவருடி எம் தளபதிக்கு தெரியாததெல்லாம் உனக்கு தெரியுமா? கனிமொழிக்கு தெரியாத மருத்துவமுறை உனக்கு தெரியுமா, குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க பார்க்கின்றாயா? என சீறுவார்கள்.
சீறட்டும், ஆனால் அவர் முழு நலம்பெற பலர் முழு முயற்சி எடுக்கவில்லை என்பதை தவிர சொல்ல ஏதுமில்லை
கலைஞர் இருக்கட்டும் ஆனால் பேசா கலைஞராக இருக்கட்டும் என்ற முடிவோ என்னமோ?