கலைஞர் இல்லா செய்திகள்…
கலைஞர் இல்லா செய்திகளை பார்க்க முடியவில்லை, சூரியன் இல்லா வானம் போல இருண்டு கிடக்கின்றது பத்திரிகை உலகம்
நினைத்து பார்கின்றேன்
அது எம்ஜிஆர் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுகொண்டிருந்த காலம், நோயினை வெளிகாட்டி பரிதாபம், மத்திய அரசுக்கு மண்டியிடுதல் என ஒரு மாதிரி அரசியல் செய்துகொண்டிருந்தார் எம்ஜிஆர்
இந்திரா சாகாமலும், அமெரிக்க காட்சிகள் இல்லைஎன்றாலும் எம்ஜிஆரை வீழ்த்தி காட்டியிருப்பார் கலைஞர்
பாக்கியராஜ், ஜெயா என களமிறக்கி பார்த்தாலும் திமுக வலுவான இடங்களை பெற்றிருந்தது
அந்நேரம் தன் தோல்வி நெருங்கி கொண்டிருந்த எம்ஜிஆர், கலைஞரின் நெருக்கடி தாங்காமல் புலம்பினார்
“இனி ஆண்டவன் தான் இந்த நாட்ட காப்பாத்தணும்”
கலைஞர் அழகாக சொன்னார், “ஆம், ஆண்டவன் தான் காப்பாற்ற போகின்றான்,
அந்த ஆண்டவன் அல்ல, உனக்கு முன்னால் தமிழத்தை ஆண்டவன்,
ஆம் தமிழத்தை “ஆண்ட”வன். நான் தான் அவன்”
மொத்த தமிழகமே கலைஞரை நோக்கி கைதட்டியது
இந்நேரத்தில்தான் இந்திராவின் மரணம் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது
இந்நேரம் கலைஞர், அதே இளம் கலைஞராக இருந்தால் எப்படி கலைப்பார் தெரியுமா?
சின்ன அம்மாவா? ,
அல்லது ஊழல், வாய்தா, மிரட்டல், வன்முறை, அடிமைத்தனம், பண நாயகம், இவற்றிற்கெல்லாம் அடையாள “சின்னம்”மாக வாழும் அம்மாவா?
சின்னம்மாவா? அல்லது ஒரு தலைவர் பெற கூடாத அவமான “சின்ன”த்தின் அம்மாவா?
இந்த சர்ச்சை சின்னத்தின் அம்மாவினையா? தமிழகம் “சின்ன அம்மா” என ஏற்றுகொள்ளும்?
பெரியம்மை நோயினின் தாக்கம் அறிந்தவர்கள், சின்ன அம்மையினை மட்டும் வரவேற்பார்களா என்ன?
இப்படி எல்லாம் முரசொலி சீறிவரும்..
அவர் இன்று அமைதியான பின், அந்த முரசொலி அர்ச்சுணன் இல்லா தேரினை போல அனாதையாக நிற்கின்றது..