கலைஞர் என்பது நதி

Image may contain: 1 person, sunglassesகலைஞரின் உடல்நிலையினை பற்றியும் அவரின் முதிர்ம காலத்தை பற்றியும் சிலருக்கு கடும் ஆனந்தம்

முதுமைக்கும் அதன் முடிவிற்கும் தப்புவது யார்? ஒருவனும் இல்லை ஏன் அவதாரங்களாலும் முடியாது. உலக யதார்த்தம் அது

அதற்கு கலைஞரும் விதிவிலக்கு அல்ல‌

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்

இயேசு இல்லை ஆனால் அவரின் கொள்கைகள் நிலைபெற்றன‌

புத்தன் இல்லை ஆனால் அவனின் தத்துவம் நின்றுவிட்டது

கார்ல் மார்க்ஸ் இல்லை ஆனால் அவனின் கொள்கைகள் அமரத்துவம் பெற்றுவிட்டது

கலைஞர் இல்லா காலத்திலும் அவரின் இயக்கமும் அவரின் கொள்கைகளும் நிலைபெற்று நிற்கும் அது சத்தியம்

அவ்வகையில் அவருக்கு ஒரு நாளும் முடிவே இல்லை.

கலைஞர் நாத்திகரா, ஆத்திகரா, அரசியல்வாதியா, இலக்கியவாதியா பலருக்கு கண்ணில் விழுந்த மண்ணா? இல்லை இதயத்தில் விழுந்த ஈட்டியா? என்பது வேறு விஷயம்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி அணுக வேண்டும், வாழ்வின் ஒவ்வொரு சிக்கலையும் எப்படி கடந்து செல்ல வேண்டும் என்று இந்த உலகிற்கே சொல்லி வாழ்ந்து காட்டியவர் அவர்

அவர் சந்தித்த சிக்கல்களை , சவால்களை யாரும் வாழ்வில் சந்திக்க முடியாது. அந்த சவால்களை எல்லாம் மிக துணிச்சலாக சந்தித்து வென்றவர்

கலைஞர் என்பது தனிச்சொல் அல்ல, திமுக எனும் கோடான கோடி தொண்டர்களின் பொதுச்சொல். ஒவ்வொரு முறை நெருப்பாற்றை தாண்டியபொழுதும் அந்த இயக்கத்தையும் சேர்த்தே காப்பாற்றி கரையேற்றி இருக்கின்றார்

அந்த அசாத்திய மனிதன் இன்று அமைதியாகி இருக்கலாம், ஆனால் எல்லா வழிகளிலும் எல்லோருக்கும் வழிகாட்டி விட்டே அமைதி ஆகியிருக்கின்றார்

என் தந்தை முழு காங்கிரஸ்காரர். அதுவும் 1960களில் வெறிபிடித்து நின்ற கன்னியாகுமரி காங்கிரஸ்காரர்களில் ஒருவராக நாகர்கோவிலில் இருந்தவர்

திமுகவினையோ அதன் கொள்கைகளையோ அவர் ஏற்றவர் அல்ல, காமராஜரை அது தோற்கடித்த வலி எக்காலமும் அவரிடம் இருந்தது

ஆனால் கலைஞரை சந்தித்துவிட்டு வந்தபொழுது என்னிடம் சொன்னார்

“என் வாழ்வில் இனி வாழமுடியாது என்ற நிலை வரும்பொழுதெல்லாம் கலைஞரை நினைத்துகொள்வேன் மனம் ஆறுதல் அடைந்து உற்சாகம் பெறும்

அந்த அளவு சிக்கல்களை பெரும் சிக்கல்களை எல்லாம் சந்தித்து சிக்கல்களை நகைச்சுவையாக அணுகி வலிபொறுத்து கடந்து சென்றவர் கலைஞர்

அவர் அளவு சிக்கல்களை சந்தித்தவனுமில்லை, அவரை போல் மீண்ட ஒருவனுமில்லை

வாழ்வில் ஆயிரம் சிக்கல் வரலாம், ஆனால் ஒரு கட்டத்தில் திசைமாறும், ஏதாவது ஒரு கட்டத்தில் நமக்கு சாதகமாய் திரும்பும் அதுவரை போராடு, உழைத்துகொண்டே இரு என்பதுதான் கலைஞரின் வாழ்வு தத்துவம்

போராட்டமே வாழ்க்கையான மனிதனுக்கு கலைஞரின் வாழ்வினை விட ஆறுதலும் முன்மாதிரியுமான வாழ்வு எதுவுமில்லை”

என் காதுகளில் எக்காலமும் ஒலிக்கும் தந்தையின் வரிகள் இவை

கலைஞர் என்பது நதி, அதற்கு முடிவே இல்லை எக்காலமும் ஏதாவது ஒரு வகையில் அது ஓடிகொண்டே இருக்கும் , யாராவது ஒருவன் அதனால் பயன்பெற்றுகொண்டே இருப்பான்

அந்த நிதர்சன உண்மையினை ஏற்கமுடியாதவர்கள் சாகலாம், அது ஒன்றுதான் அவர்களுக்கான மன ஆறுதலை கொடுக்கும்


கலைஞர் போலவே முதுமையின் கொடுமையில் சிக்கி கிடப்பவர் வாஜ்பாய், அவரைபற்றி எவனாவது பேசுவானா என்றால் இல்லை

ஆனால் கலைஞரை மட்டும் என்னவெல்லாமோ சொல்லி அந்த தண்டனை, இந்த தண்டனை என நிந்தனை வசைபாடிகொண்டே இருக்கின்றார்கள்

கடவுள் பக்தி மிக்கவரும், மகா ஆச்சாரியம் காத்தவருமான வாஜ்பாய் என்ன குற்றம் செய்தார் என கேட்டால் பதில் வராது


You Tubeல் அங்கிள் சைமன் அள்ளிவிட்ட வீடியோக்களை கண்டு உணர்ச்சியில் பொங்கி திமுக ஒழிக, கலைஞர் ஒழிக என சொல்லி திரிபவன் எல்லாம் திருப்பூரில் You Tube பார்த்து பிரசவம் கவனித்து பெண்ணை கொன்றவனை திட்டி திரிகின்றான்

அவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே You Tubeல் ஏமார்ந்த கோஷ்டி, போங்கடா டேய்