கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருந்தார்
கலைஞர் மிக சிறந்த வசனகர்த்தா என்பது அவர் மிக பொருத்தமாக எழுதும் பல வசனங்களில் வெளிப்படும், சூழலுக்கு அற்புதமாக வசனம் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே
எத்தனை பேர் கியூபாவினை பற்றி பேசினாலும், கலைஞர் பேசியிருக்கும் அழகு வராது, முன்பே பேசியிருந்தார்.
அவர் நச்சென்று சொன்னது இது
” ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு!
தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் – அந்தக் கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ!”
இதனை விட கியூப நிலை, அமெரிக்க தோல்வி, காஸ்ட்ரோ புகழினை சொல்லமுடியுமா?
இன்னமும் சொன்னார்
“தென்னை, வாழை, பெரு மரங்களை எல்லாம் சரித்து விழுங்கும் யானை, அங்குசத்தை விழுங்குமா?
அமெரிக்கா யானை என்றால் காஸ்ட்ரொ அங்குசம்..”
எப்படி கியூபானினை அமெரிக்க காலடியில் வைத்து சோவியத் யூனியன் விளையாடியது என்பதை இதனை விட எப்படி விளக்க முடியும்
கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருந்தது இப்படித்த்தான்
சரி இத்தனை தலைவர் இருக்கும்பொழுது காஸ்ட்ரோ மீது அவருக்கு அப்படி என்ன பற்று?
தன் தம்பிக்கு அதாவது குடும்த்தினருக்கு தனக்கு பின் தன் வாரிசாக பதவியினை கொடுத்த காஸ்ட்ரோ கலைஞரை கவர்ந்திருக்கலாமோ?
இருக்கலாம்
ஆனால், அந்த தேன் கூடு, யானை , அங்குசம் என்ற வார்த்தைகளை இப்பொழுது காஸ்ட்ரோவொடு பொருத்தி பாருங்கள்
கலைஞரை தேடி சென்று கட்டியணைக்க தோன்றும், இனி அப்படி ஒரு சுவாரஸ்யமான நபரை எங்கே காண்பது?