கலைஞர் சமாதியில் முரசொலி தினமும் வைக்கபடுகின்றது
கலைஞர் சமாதி பக்கத்தில்தான் அவர்களின் பிதாமகன் அண்ணா சமாதி அவருக்கு முரசொலியும் கிடையாது , பூவும் கிடையாது, பழமும் கிடையாது, ஒன்றும் கிடையாது
அட ஒரு ஆப்பிள் பழம் கூட கிடையாது
அவருக்கு பிடித்த பொடி டப்பாவோ , வெற்றிலையோ அவ்வளவு ஏன் மிக்சர் பொட்டலம் கூட வைக்க யாருமில்லை
கலைஞருக்கு பூவும் பழமும் முரசொலியும் படைக்கும் திமுகவினர் அந்த அண்ணாவிற்கு ஒரு மிக்சர் பொட்டலமாவது வைக்கலாம்
ஆனால் துளி மூக்குபொடி கூட வைக்கவில்லை
இங்கு முரசொலி வைப்பவர்கள் அண்ணா சமாதியில் பேப்பரும் பேனாவும் வைக்கலாம்,
அவர் எழுதாத எழுத்தையா கலைஞர் எழுதிவிட்டார்?
(அண்ணா நள்ளிரவில் வந்து அந்த பேப்பரில் திமுகவினை கலைத்துவிடுகின்றேன் என எழுதபோகின்றாரா என்ன? ..)
பாவம் அண்ணா , கலைஞரை வளர்த்து விட்ட பாவத்திற்காக அருகில் அனாதையாக இருக்கின்றார்
“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என அவர் கல்லறையில் எழுதபட்டிருப்பது இதற்காகத்தான்
கலைஞர் சமாதியில் முரசொலி தினமும் வைக்கபடுகின்றது
ஏம்பா வீரமணி, வாயில் என்ன ஓசிச்சோறா? அந்த சுப.வீ எல்லாம் அழைத்து இந்த மூட நம்பிக்கையினை கண்டித்தால் என்ன?
இன்று முரசொலி வைப்பவர்கள் நாளை செயற்குழு முடிவு, பொதுகுழு தீர்மானம், அமைச்சரவை பட்டியல் என ஒன்றுவிடாமல் வைப்பார்கள்
இதற்கு கலைஞரை அறிவாலயத்திலே அடக்கம் செய்திருக்கலாம்