கலைஞர் மகன் நேர்வழியில் வந்தால்தான் கலைஞருக்கு அவமானம்

Image may contain: 8 people, including Moses Asli, people smiling, people sitting

இந்த ஆட்சியினை நொடியில் கலைத்திருப்போம், ஆனால் சில காரணங்களுக்காக விட்டு வைத்தோம் : துரைமுருகன்

நேர்வழியில் வருவோம், கலைஞர் மகன் ராஜபாட்டையில் வருவார் புழக்கடையில் வரமாட்டார் என ஏக சமாளிப்புகள்

இப்பொழுது இவர்கள் திடீரென நேர்வழி, முட்டு சந்து, யூ டேர்ன் என கிளம்ப என்ன காரணம்?

அதிமுகவின் சில குதிரைகளை வாங்கி ஆட்சி அமைத்திருக்கலாம், அட தேர்தலே கூட நடத்தி ஆட்சிக்கு வந்திருக்கலாம்

ஆனால் டெல்லி அசுரபலத்தில் இருக்கும்பொழுது ஆட்சி நடத்துவது எளிதா? முன்பு பலமுறை திமுக அரசினை டெல்லி காரணமே இன்றி கலைத்தது தெரியாதா?

டெல்லி அசுரபலம் கொண்டிருக்கும் பொழுதெல்லாம் இங்கு நிலையான ஆட்சி சாத்தியமில்லை, இப்படி அடிமைகள்தான் ஆளமுடியும்

டெல்லியில் கூட்டணி தள்ளாட்டம் இருக்கும் சூழல் என்றால், மத்தியில் அவர்களை ஆதரித்து ஆட்சியிலும் பங்குபெற்று இங்கு மைனாரிட்டி எம்.எல்.ஏ இருந்தாலும் டெல்லியினை மிரட்டியே இங்கு ஆட்சியினை கொண்டு செல்வார்கள்

டெல்லியில் வலுவான தலமை இருப்பதே இவர்கள் தயக்கத்திற்கு காரணமே அன்றி வேறு எதுவும் அல்ல‌.

நேர்வழி, நியாயமான வழி என்றிருந்தால் கலைஞர் இன்று நல்லகண்ணு அளவில்தான் தமிழகத்தில் இருப்பார்

நெடுஞ்செழியனும் அன்பழகனும் என்றோ முதல்வராகி இருப்பார்கள், அவ்வளவு ஏன் ஈவிகே சம்பத்தும் முதல்வராகி இருக்கலாம் அவர் வாரிசாக இளங்கோவனும் இன்று முதல்வராக வந்திருக்கலாம்

இவை எல்லாம் கலைஞரின் புழக்கடை அரசியலால் தடுக்கபட்டவை

கலைஞரின் வெற்றியில் அவரின் சாகச தந்திரமும் உண்டு

கலைஞர் மகன் நேர்வழியில் வந்தால்தான் கலைஞருக்கு அவமானம்.

தந்திரமாக புழக்கடை வழியில் வந்தால் மட்டுமே ஸ்டாலின் கலைஞரின் பெயர் சொல்லும் பிள்ளை