கலைஞர் மாபெரும் தமிழின தீர்க்கதரிசி
அந்த மகா துடிப்பான, போர்குணமிக்க கலைஞர் பல போராட்டங்களை நடத்திகொண்டிருந்த 1960களில் அவரிடம் கேட்டார்கள்.
“காமராஜர் நல்லாட்சி நடத்தினார், பக்தவச்சலம் ஆட்சியிலும் பெரும் குறை இல்லை, மத்திய அரசும் உங்கள் பல கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கின்றது பெரியார் கூட காமராஜர் ஆட்சி தொடரவேண்டும் என்கின்றார், பின்னர் ஏன் போராடிகொண்டிருக்கின்றீர்கள்
இந்த நல்லாட்சியிலே பல நியாயமான கோரிக்கைகளுக்கு போராடித்தான் முடிவு கிடைக்கின்றது என்றால், வருங்காலத்தில் மகா மோசமான அரசுகள் அமைந்தால் தமிழகம் எப்படி எல்லாம் போராட வேண்டும் என நினைத்துபாருங்கள்? அப்படி ஒரு காலம் வருங்கால சந்ததிக்கு வந்துவிட கூடாது என்றுதான் நாங்கள் போராடி கொண்டிருக்கின்றோம் “
அன்று பெட்டி செய்தியாக கடந்து செல்லபட்ட சாதாரண செய்தி இது, இன்று அது மகா உண்மையாகி கண்முன் நிற்கின்றது
அம்மனிதன் மாபெரும் தமிழின தீர்க்கதரிசி