கலைஞர் மெரீனாவில் அடக்கம் செய்ய இடமளிக்கும் சர்ச்சை நீடிக்கின்றது
கலைஞர் மெரீனாவில் அடக்கம் செய்ய இடமளிக்கும் சர்ச்சை இன்னும் நீடிக்கின்றது
முன்னாள் முதல்வருக்கு எல்லாம் அடக்கம் செய்ய அனுமதிக்கலாமா? அப்படியானால் மெரீனா சுடுகாடு ஆகிவிடாதா என்றெல்லாம் வரிந்து கட்டுகின்றார்கள்
இது எல்லா முதல்வர்களுக்கும் என எப்படி பொருந்தும், நெடுஞ்செழியன், ஜாணகி எல்லாம் அங்கு வந்தார்களா? வரமுடியுமா?
அங்கு நடந்த முதல் தவறு ராமசந்திரனை அடக்கம் செய்தது இரண்டாம் தவறு குற்றவாளி ஜெயலலிதாவினை அடக்கம் செய்தது
கலைஞர் என்பவர் முதுபெரும் தலைவர், யாருக்கும் இல்லா சிறப்பு தகுதி அவருக்கு உண்டு, 50 ஆண்டுகாலம் கட்சி நடத்தி 19 ஆண்டுகாலம் முதல்வராய் இருந்து, 75 ஆண்டுகாலம் பத்திரிகை நடத்தியது என்பதெல்லாம் மாபெரும் சாதனை
தமிழ்நாட்டிற்கு அவர் செய்த நல்ல திட்டங்கள் ஏராளம், பயன்பெற்றோர் பல கோடி
பெரும் திராவிட பாரம்பரியம் அவர், அண்ணாவின் அடுத்த இடத்தில் 50 ஆண்டுகாலம் நீடித்தவர்
அவரை போல இன்னொருவரை தமிழகத்தில் காட்டிவிட்டு கலைஞருக்கு மெரீனாவில் மறுப்பு சொல்லுங்கள், முடியுமா?
யார் உண்டு? தனிபெரும் தலைவனாக விளங்குபவருக்கு ஏன் தனிமரியாதை கொடுக்க கூடாது?
யாருக்கும் இல்லா பெரும் சிறப்புகள் அவருக்கு இருப்பதால் அவரை அண்ணாவின் அடுத்த இடத்தில் அடக்கம் செய்வதே அவருக்கு செய்யும் மரியாதை கடமை
அத்தோடு மெரீனாவிற்கு சீல் வைக்கலாம், இதுதான் செய்ய வேண்டியது.
இதற்கும் மேல் தடுத்தால்..
பேசாமல் புதிய சட்டமன்ற கட்டிடம் என அவர் கட்டிய அந்த கட்டடத்தில் புதைத்துவிடலாம்
கலைஞர் கட்டிய காரணத்தால் அங்கு சட்டமன்றம் இயங்காது என மிக மூர்க்கமாக சொல்லி மாற்றிய அகங்காரம் பிடித்த ஜெயா கல்லறை மெரீனாவில் இருக்கும்பொழுது..
அந்த கட்டடம் சும்மா ஒப்புக்கு இருக்கும்பொழுது, பழனிச்சாமி அரசும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும்பொழுது,..
அந்த சட்டமன்ற கட்டிடத்தை அனுதினமும் பார்த்து பார்த்து கட்டிய கலைஞரை, அது நிறைவேறா ஏக்கத்தை மனதோடு புதைத்த கலைஞரை அங்கு புதைப்பதுதான் சரி..
சென்னைக்கு முதலில் வந்த ஐரோப்பியர் போர்த்துகீசியர், அவர்களில் முக்கியமான மாலுமி மெட்ருஸ்
வந்த இடத்தில் அவன் இறந்தான், அன்றைய சென்னையில் ஜார்ஜ் கோட்டையுமில்லை சென்னை என்ற அடையாளமுமில்லை
அது பல கிராமங்களாக குப்பங்களாக பிரிந்து கிடந்தது
அந்த மெட்ருஸ் என்பவனை சாந்தோம் அருகே அடக்கம் செய்தார்களாம், அடக்கம் செய்த இடம் மெட்ராஸ் என்றானது,
மெட்ராஸ் எனும் பெயர் இப்படித்தான் வந்தது
பின்பு வந்த வெள்ளையன் அந்த சென்னப்ப நாயக்கரிடம் இருந்து நிலம் வாங்கி ஜார்ஜ் கோட்டையினை வடக்கே கட்டினான் கட்டினான், மெட்ராஸ் பட்டினம் என்றே பெயரும் இட்டான்
மெட்ராஸ் என்ற பெயர் வரலாற்றில் நிலைத்தது, எதுவரை என்றால் 1995 வரை நிலைத்தது
ஆக ஒரு ஊரை உருவாக்க வந்து செத்த அந்த மெட்ருஸ் என்பவனை புதைத்துத்தான் மெட்ராஸ் உருவாகி சென்னையாக வளர்ந்து நிற்கின்றது
அந்த கடற்கரையில், நவீன சென்னையினை உருவாக்கிய கலைஞரை புதைக்க கூடாதாம்