கல்லூரிகளில் அரசியல் பேசும் விழாக்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு
கல்லூரிகளில் அரசியல் பேசும் விழாக்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு
மிக மிக நல்ல உத்தரவு, ஓடாத கடிகாரமும் ஒரு முறை சரியான நேரம் காட்டும் என்பது போல பழனிச்சாமி அரசின் மகத்தான உத்தரவு இது
நிச்சயம் கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டுத்தான் பல சீரழிவுகள் நடந்தன, 1960களில் அவர்களை தூண்டிவிட்டுத்தான் பல காட்சிகள் இங்கு அரங்கேறின
அப்படி கிளம்பிய மாணவர்கள்தான் பின்னாளில் வைகோ போல ஆனார்கள்
அங்கிள் சைமனை எல்லாம் அழைத்து சில கிறிஸ்தவ கல்லூரிகள் அரசியல் பேசியகொடுமை எல்லாம் நடந்தது, அதை இப்பொழுது தடுக்கின்றார்கள்
இதற்கு பலர் குதிப்பான், அராஜகம் என்பான், மாணவர்களுக்கு அரசியல் அறிவு வேண்டாமா என்பான், அவனை எல்லாம் கண்டுகொள்ள கூடாது
இப்படி பேசி பேசித்தான் கல்லூரி மாணவர்களிடையே சாதி, மதம், கட்சி என என்னவெல்லாமோ கலந்துவிட்டது
கல்லூரி போவது பாடம் படித்து பட்டம் வாங்கவா? அரசியல் பயிலவா? அரசியல் பயில ஒரு வட்ட செயலாளர் அலுவலகம் போதாதா?
மாணவபருவத்திலே நஞ்சை விதைக்கும் இந்த விஷயங்களை தடுத்ததால் பழனிச்சாமிக்கு முதல் முறையாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்
இன்றுமுதல் நீர் ” கல்லூரி மாணவர்களை காத்த சாமி” என அன்போடு அழைக்கபடுவீர்