கல், சாராயம் , மண் விற்க ஒரு அரசு…

அனுமதியில்லாத இறக்குமதி மணலை விற்றால் 2 ஆண்டு சிறை: தமிழக அரசு உத்தரவு

ஆமாம் பழனிச்சாமி அரசும் அவர் சகாக்களும் மட்டுமே இங்கு மணல் விற்கும், அதையே எல்லோரும் வாங்க வேண்டும்

அரசே மதுவிற்கும் அதையே எல்லோரும் குடிக்க வேண்டும், மீறி வேறு மது குடித்தால் அது கள்ளசாராயம்

அப்படி வேறு மணல் வந்தால் அது கள்ள மணல், அரசு சும்மா விடாது, பின் எப்படி கட்சிக்காரர் பிழைக்க, இவர்கள் கல்லா கட்ட?

அதனால் மண் , கல் இதில் எல்லாம் கவனமாக இருப்பார்கள்.

ஆனால் சிமெண்டில் மட்டும் கைவைக்க மாட்டார்கள் அது பல வடநாட்டு ஆலை விஷயம் என்பதாலும், பெரும் தலைகள் என்பதாலும் கமிஷனோடு கப்சிப்

கல், சாராயம் , மண் விற்க ஒரு அரசு.

விரைவில் குட்கா வியாபாரமும் முறைபடுத்தபட்டு அரசு குட்கா நிறுவணம் நடந்தாலும் ஆச்சரியமில்லை

அதிமுகவினர் கம்பெனி நடத்துவார்கள் அரசு விற்கும், பின் திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கட்சிகாரர்களும் அதையே செய்வார்கள்

மதுவிவகாரம் இப்படித்தான் ஆனது, இனி குட்கா விவகாரமும் அப்படி ஆகலாம்