கள்ளகாதலனே எங்காவது ஓடி உயிரை காப்பாற்றிகொள்..
சென்னையில் கள்ளகாதலன் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் கைது
வழக்கமாக கள்ளகாதலுடன் சேர்ந்துதான் கணவனை கொல்வார்கள், பெரும் புரட்சியின் முதல்படியாக கள்ளகாதலன் மனைவியே கொலைக்கு துணை சென்றிருகின்றாள்
அந்த பெண்களுக்குள்எவ்வளவு அழகான புரிந்துணர்வு?
இவன் போன பிறவியில் கோவலனாக இருந்திருப்பானோ என்னவோ?
இரு பெண்கள் வெற்றிகரமாக ராக்கெட் செலுத்தியிருக்கும் நாட்டில், இரு பெண்கள் சேர்ந்து ஒருவனை கொலைசெய்திருக்கின்றார்கள்
ஆண்கள் எல்லாம் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
வழக்கமாக அடுத்த ஆண்களிடம் பேசாதே என மிரட்டுவதை போல இனி அடுத்த பெண்களிடம் பேசாதே என்றுதான் இனி மிரட்ட வேண்டும்
ஆண்குலம் அந்த பெரும் ஆபத்தில் இருக்கின்றது, ஆண்களுக்கு இஙகு பாதுகாப்பே இல்லை
எனினும் இந்த கள்ளகாதலன் என்பவன் கவனமாக இருப்பது நல்லது, அந்த இரு பெண்களும் மூன்றாவதாக ஒருத்தியினை சேர்த்து இவனை கொல்ல எவ்வளவு நேரமாகும்?
ஏ …காதலை ஒழுங்காக செய்ய தெரியாத கள்ளகாதலனே எங்காவது ஓடி உயிரை காப்பாற்றிகொள்..