கவர்னர் நேரே அதிகாரிகளை சந்தித்து….

Image may contain: 2 people, people smiling, people sitting and indoor

அண்ணே இங்க ஒரு முதலமைச்சர் இருக்காரு, ஏகபட்ட அமைச்சர் இருங்காங்க, அப்படி இருக்கும் போது ஒரு கவர்னர் நேரே அதிகாரிகளை சந்திச்சி ஆலோசனை செய்தா எண்ணண்ணே அர்த்தம்

இவர்கள‌ மனுஷனாகவே மதிக்கலண்ணு அர்த்தம், இவர்கள் ஆள தகுதியே இல்லாதவர்கள்னு அவர்களுக்கு தெரிஞ்சிருக்குண்ணு அர்த்தம் தர்பூசனி தலையா


ஆளுநர் தலையீடு – தமிழகத்துக்கும் நோய் பரவியது: நாராயணசாமி

ஏற்கனவே கிரண்பேடி புதுவையில் சதிராட்டம் ஆடுவதில் மனிதர் குழம்பியிருந்தார், இப்பொழுது தமிழகத்தையும் பார்த்து கதற தொடங்கிவிட்டார்

எவ்வளவு பொய் சொல்லி, எவ்வளவு பணம் செலவழித்து, எப்படி எல்லாம் சீட் வாங்கி, பின் எம்.எல்.ஏக்களை வாங்கி கிட்டதட்ட செத்து முதல்வராகின்றார்கள்.

அவர்களுக்கு மேல் ஒன்றுமே செலவழிக்காமல் ஒருவர் ஆளுநர் என எங்கிருந்தோ வந்தால் கோபம் வராதா?


 எல்லா மாவட்டத்திலும் ஆய்வு செய்வேன் : கவர்ணர்

எங்கே சில மண்குவாரி, கல் குவாரி, கிரானைட் குவாரி, தாது மணல் ஏரியா, சில எஸ்டேட்டுகள் எல்லாம் சென்று வந்துவிடுங்கள் பார்க்கலாம்.


அரசை பாராட்ட ஆய்வு வேண்டும், ஆய்வு செய்யத்தான் களத்திற்கு வந்தேன் : கவர்ணர் புரோகித்

கவர்ணர் அவர்களே, இந்த அரசை பற்றி தெரிந்து கொள்ள ஆய்வு வேறு வேண்டுமா?

பழைய கவர்ணருக்கு போன் போட்டு பேசியிருந்தாலே தெரிந்திருக்குமே, எதற்கு ஆய்வு? ஆக நீங்கள் ஏதோ முடிவோடு களமிறங்கிவிட்டது புரிகின்றது

கவர்ணர் ஆட்சிக்கு ஒத்திகையா அய்யா?


அந்த கும்பலில் எவனாவது ஒருவன், தமிழனுக்கு தமிழ் ஆளுநர்தான் வேண்டும், வடக்கத்திய ஹிந்தியனே போ, தமிழனை ஆளுநராக அனுப்பு என கத்துவான் எனபார்த்தால் சத்தமே இல்லை.

எதை பேசினால் வாயிலே அடிவிழும் என நன்றாக தெரிந்து வைத்திருக்கும் கும்பல் இது,

எளிய தமிழ் பிள்ளைகள் சும்மா களமாடவில்லை, மிக நுட்பமான பயிற்சியுடனே களத்தில் இருக்கின்றார்கள்