கவர்னர் வீணாக காலதாமதம் செய்கிறார் :சசிகலா எரிச்சல்.
கவர்னர் வீணாக காலதாமதம் செய்கிறார் :சசிகலா எரிச்சல்.
என்னது 2 நாள் என்பது காலதமதமா?
27 வருடமாக இவர்களால் பாதிக்கபட்ட குடும்பம் எத்தனை, கங்கை அமரன் முதல், பாலு ஜூவர்லர்ஸ் வரை எத்தனை குடும்பம நீதிக்காக இன்னும் அழுதுகொண்டிருக்கின்றது
இன்னும் தெரியாதது எத்தனை ஆயிரம் குடும்பமோ?
சொத்துகுவிப்பு வழக்கு 18 வருடம் இழுத்தது, எப்படி எல்லாம் வாய்தா வாங்கினார்கள், எப்படி எல்லாம் இழுத்தடித்தார்கள், அப்பொழுது ஆச்சார்யா உட்பட எத்தனை பேருக்கு எப்படி இருந்திருக்கும்?
2 நாட்கள் இவர்களால் பொறுக்க முடியவில்லையாம், ஆனால் ஆண்டு கணக்கில் எத்தனை பேர் இவர்களை சகிக்க முடியாமல் கதறி கொண்டிருந்தார்கள்
75 நாட்கள் ஜெயலலிதாவினை யாரும் பார்க்காமல் மருத்துவமனையில் வைத்து சாகசம் காட்டினார்களே, அப்பொழுது தமிழகத்திற்கு எப்படி இருந்திருக்கும்??
ஆளுநர் தமிழகத்திற்கு ஏதும் செய்யவேண்டியதாக கருதினால் விடுமுறை எடுத்துவிட்டு உலக சுற்றுலா செல்லலாம்.
இவர்கள் இன்னும் எப்படி எல்லாம் எரிச்சல்படுகின்றார்கள், அழுகின்றார்கள், கதறுகின்றார்கள் என தமிழகம் காண அருமையான வாய்ப்பு கிடைக்கும்.
அங்கிள் சைமன், ஒரு தெலுங்கு கவர்ணர் பச்சை தமிழச்சி சசிகலாவினை எப்படி எல்லாம் பாடாய் படுத்துகின்றார்
நீங்கள் ஒரு வார்த்தை தமிழ்நாட்டிற்கு தமிழ் கவர்ணர் தான் வேண்டும் என சொன்னால் என்ன?
தமிழன் ஒருவன் கவர்ணர் ஆனால்தான் இந்த தமிழக நெருக்கடி தீரும் என மேடைகளில் முழங்கினால்தான் என்ன?
இப்பொழுதெல்லாம் அங்கிள் சைமன் காமெடிகள் செய்வதினை குறைத்துகொண்டார் போலும்..
கலைஞரும், காங்கிரசும் என்றால் அன்னார் தமிழன் என சீறுவதும், மற்றவர்கள் என்றால் ஹிஹிஹிஹிஹ் என நழுவுவதும் இன்று நேற்றா? நடக்கின்றது?