கவுதமிக்கு சின்ன ஜெயலலிதா ஆகும் ஆசை இருக்கலாம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என பல சர்ச்சைகள், அது எப்படி நடந்தது என விளக்கம் வேண்டுமாம், கவுதமிக்கு சின்ன ஜெயலலிதா ஆகும் ஆசை இருக்கலாம், தப்பில்லை யாரும் ஆசைபடலாம்
இது மக்களாட்சி காலமாக இருக்கலாம், ஆனால் ராஜபாதுகாப்பு என்பது அப்படியே தொடர்கிறது. அவ்வளவு உயரத்தில் இருந்தவர், நிச்சயம் எல்லா விஷயத்திலும் எவ்வளவு கவனமாக இருந்திருப்பார்?
தனக்கு விசுவாசமாக இல்லாதவர்களையா சமையல் முதல் வாயில் காப்பாளன், டிரைவர் வரை அனுமதித்திருப்பார்? எத்தனை உளவுகள், எத்தனை ரகசிய கண்காணிப்புகள் இருந்திருக்கும்?
கலைஞர் அதனை வைகோ டிஸ்மிஸில் செய்தார், இதற்கு மேல் விட்டால் ஆபத்து என்றேதான் அன்று அதனை செய்தார்
மாநில உளவுதுறைகளின் வேலை என்ன? அந்நிய சக்திகள், மாநிலத்தில் நிலவும் ரகசிய நடமாட்டங்கள் என ஆராய்ந்து முதல்வருகு தெரிவிப்பது
ஆனால் தமிழக உளவுதுறையினர் வேலை முதல்வருக்கும் ஆளும் கட்சிக்கும் எதிராக என்ன நடக்கின்றது முதல் முதல்வர் வீட்டு காய்கறி எங்கிருந்து செல்கிறது என்ன நடக்கின்றது, எதிர்கட்சிகள் உதிரிகட்சிகள் எங்கு கழிவறை செல்கின்றார்கள் என்பது வரை அத்துபடி
அவ்வறிக்கைகள் முதல்வருக்கு வராமல் இருக்குமா? தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என அவருக்கு தெரியாமல் இருக்காது, அப்படி இருந்திருந்தால் இந்நாள் வரை அவர் பதவியில் இருந்திருக்க முடியாது
அன்னாளைய ராஜ பாதுகாப்பின் நுட்பமே இன்றைய மக்களாட்சி தலைவர்களின் பாதுகாப்புமே,
ஆக ஜெயாவிற்கு எல்லாம் தெரிந்தே இருந்திருக்கும்
அதற்கும் மேல் அவர் சசிகலாவினை கூட வைத்திருந்ததும் அவரின் விருப்பமே
அதனை மீறி அப்பல்லோ மர்மம் என இருந்தால் அதற்கு முதல் காரணம் ஜெயல்லிதாவே அன்றி வேறுயாருமல்ல
எந்த நலம் விரும்பி சொல்லியும் கேட்கமாட்டேன், எதனையும் காதில் வாங்கமாட்டேன் சசிகலா என்னுடனே இருப்பார் என காட்டிய ஜெயலலிதாவே இந்த மர்மத்திற்கு விடை , அவரே பொறுப்பு
அதனை விட்டுவிட்டு அதில் மர்மம், இதில் மர்மம் என கிளம்புவது நிச்சயம் வீண் சர்ச்சைஅரசியலே அன்றி வேறல்ல.
இருக்கட்டும்
கமலஹாசனை பிரியும் பொழுது மகளின் எதிர்காலம் முக்கியம் என்றார் கவுதமி
அப்படியானால்
மகளை பாஜகவில் பெரும் பொறுப்பிற்கு கொண்டுவரும் திட்டம் இருக்குமோ? ராமருக்கே வெளிச்சம்.