கவுரி கொலை நிச்சயம் கண்டிக்கதக்கது
கவுரி கொலை நிச்சயம் கண்டிக்கதக்கது, ஆனால் மாநில ஆட்சியாளர் யாரென்றால் நிச்சயம் காங்கிரஸ்
கன்னட காங்கிரஸ் அரசில் இந்த அராஜகம் நடக்கின்றது என யாரும் சொல்லவில்லை, மாறாக மோடியின் இந்தியாவில் அட்டகாசம் என எழுதுகின்றார்கள்
பின் எதற்கு மாநில அரசு? அதற்கொரு முதல்வர்?
கல்புர்கி கொலையிலே மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் கவுரி கொல்லபட்டிருப்பாரா? நிச்சயம் இல்லை
ஆக அம்மாநில அரசு மீதும் சில குற்றசாட்டு உண்டு அதை பற்றி யாரும் பேசவில்லை
பிரகாஷ்ராஜூம் பேசவில்லை, மாறாக அதற்கு காரணம் மோடி அரசு என சொல்வது மகா அபத்தமும், அர்த்தமில்லாததும், தேடி பிடிக்கபட்ட காரணமாகும்
நல்ல வேளையாக சந்தண கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் எல்லாம் இப்போது இல்லை, இருந்திருந்தால் அதுவும் மோடி ஆட்சியின் பயங்கரவாதமாகவே இங்கு சித்தரிக்கபடும்