காங்கிரசுக்கு இறுதிசடங்கு
இந்த தெருநாவு அரசர் என்பவர் காங்கிரசுக்கு இறுதிசடங்கு செய்யும் காரியத்தில் இறங்கி இருக்கின்றார்
கோஷ்டிகளுக்கு பஞ்சமே இல்லா தமிழக காங்கிரசில் தெருநாவு அரசருக்கும் ஒரு கோஷ்டி உருவாகி அது அவர் அடுத்த முதல்வர் என்ற அளவில் கதைவிட்டு கொண்டிருகின்றது
சைமன் பிரதமர் ஆனாலும் தெருநாவு முதல்வராகுமா? ஒரு நாளும் நடக்காது, எனினும் தான் அடுத்த முதல்வர் எனும் கனவோடு அலைகின்றார் தெருநாவு அரசர், இன்னும் தமிழக காங்கிரசின் நிரந்தர தலைவர் எனும் நினைப்பும் இருக்கின்றது
இந்நிலையில் தெருநாவு குஷ்புவினை மகா கொடூரமாக தீட தொடங்கிவிட்டார், ஒரு கட்சியின் மாநில தலைவர் எனும் பொறுப்புகொஞ்சமும் இல்ல்லை
குஷ்பு திமுகவில் இருந்து அடித்துவிரட்டபட்டார் என்றும், அவர் நடிகை என்றும் , அரசியலுக்கு வருமுன் அவர் என்ன செய்தார் தெரியுமா? ஏராளமான வசவுகள்
அதுபோக நான் ஜெயலலிதாவினையே பார்த்தவன், குஷ்பு என்னை என்ன செய்யமுடியும் என இறுமாப்பு வேறு
கொஞ்சமும் நிதானம் இருந்தால் இப்படி பேசுவாரா?
குஷ்பு திமுகவில் இருந்து விரட்டபட்டார் என்றால், அதிமுகவில் இருந்து உதிர்ந்த மயிர் என சொல்லி இவரை ஜெயலலிதா விரட்டியது என்ன ரகம்
ஜெயலலிதாவினை எதிர்த்து இவர் என்ன கிழித்தார்? தலை தெறிக்க ஓடினார், அதன் பின் இவர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தத்தான் சென்றார்
அந்த அளவு ஜெயலலிதாவால் ஓட அடிக்கபட்டவர்தான் இன்று ஜெயலலிதாவினை பார்த்தவன் நான் என்கின்றார்
தூரத்தில் ஒளிந்திருந்து பார்த்திருப்பார் போல
ஜெயலலிதாவிடம் என்ன அடி வாங்கினாரோ, பாஜகவில் எப்படி எல்லாம் அவமானபடுத்தபட்டாரோ அப்படி காங்கிரசிலும் வாங்க தயாராகின்றார்
குஷ்பு அரசியலுக்கு வருமுன் என்ன செய்தார் என்றால் , ஜெயலலிதா என்ன செய்தார் என இவர் கேட்டாரா?
சரி இவர் அரசியலுக்கு வருமுன் என்ன செய்தார்? வந்து என்ன கிழித்தார்? பல கட்சியில் இருந்து பைத்தியம் ஆனதுதான் மிச்சம்
சங்கம் தெருநாவினை வன்மையாக கண்டிக்கின்றது, இந்த தெருநாவினை அடக்க தெரியா காங்கிரஸ் மேலிடத்தையும் வன்மையாக கண்டிக்கின்றது
ஒருசில காங்கிரஸ் … வந்து இது கட்சி விவகாரம் நீ பேசாதே என்கின்றது. கட்சி சோனியா வீட்டு கழிவறை கழுவும் இயக்கமாக இருந்தால் யார் பேசபோகின்றார்?
நாங்கள் மக்களுக்கு சேவை செய்யும் இயக்கம் என சொல்லிகொண்டு வோட்டு கேட்க நீங்கள் வருபவர்கள் என்றால் யாரும் சொல்லத்தான் செய்வார்கள்
தெருநாவுக்கு அரசரை தெருவோடு அனுப்பாவிட்டால் வருங்காலத்தில் பாஜகவிற்கு கீழான வாக்குகளை காங்கிரஸ் வாங்கும்
தமிழக காங்கிரசின் ஒரே நம்பிக்கை குஷ்பு, அதை கெடுக்க பாஜகவினால் அனுப்பபட்ட ஸ்லீப்பர் செல் இந்த தெருநாவு
இந்த கருப்பு ஆட்டினை உடனே விரட்டிவிடுவது காங்கிரசுக்கு நல்லது, இல்லாவிட்டால் ஏக சிக்கல்களை அது சந்திக்கும்
அரசியல் அனாதையான தெருநாவு எல்லாம் ஏதோ காங்கிரஸ் தியாகி போல பேசிகொண்டிருக்கின்றான், அதற்கும் சிலர் கைதட்டி கொண்டிருக்கின்றார்கள்
அவரின் அடிப்பொடிகளும் அவரின் அனுபவம் என்ன தெரியுமா? என்கின்றன.
ஏர் மாட்டிற்கு அனுபவம் இருந்தால் நல்லது, தெருநாய்க்கு குரைப்பதிலும் குப்பைமேட்டில் உருளுவதிலும் அனுபவம் இருந்து என்ன பயன்?
இதுவரை தலைவியினை எதிர்த்த யாரும் உருப்பட்டதாக சரித்திரமில்லை
முன்பொருமுறை அவரை அழவைத்த நபர் ஒருவர் மன்னார்குடி கும்பலிடம் சிக்கி அந்த கவலையில் இறந்தே போனார்
திமுக அவரை விரட்டியபின் சரிந்து கிடக்கின்றது
அவர்மேல் வழக்கு தொடுத்து மிரட்டியவர்கள் எல்லாம் சரிந்ந்து கிடக்கின்றனர்
இந்த தெருநாவுவினை போல் அல்ல, இவரை விட மகா கொடிய வஞ்சக கொடூரர்களை எல்லாம் சந்தித்து வெற்றி கண்டவர் தலைவி
இந்த .. எல்லாம் அவருக்கு ஒரு தூசு என்பதால் தலைவி இன்னும் வாய்திறக்கவில்லை, அவர் தகுதிக்கு அதுவே சரி
சங்கமும் இந்த செத்தபாம்பினை அடிக்ககூடாது என்றுதான் யோசிக்கின்றது, எனினும் எச்சரிக்கை மட்டும் கொடுக்கின்றது
தெருநாவு இன்னும் நாக்கினை கட்டுபடுத்தாவிட்டால் பின்பு நடப்பதை காலம் சொல்லும்
இதுவரை தலைவியினை எதிர்த்த யாரும் உருப்பட்டதாக சரித்திரமில்லை, தெருநாவும் அழியும் காலம் நெருங்கி இருப்பதால் முன்பு தலைவியினை எதிர்த்தவர்கள் என்ன பாடு பட்டார்களோ அதே முடிவிற்கு தயாராகின்றார்