காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது

Image may contain: 1 person, smiling, close-up

இந்த காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது

இந்த விஜயதாரணி என்பவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கின்றது டெல்லி காங்கிரஸ், யார் இந்த ஜெயலலிதா? 1989ல் கலைஞர் நிதிநிலை அறிக்கை படிக்க தொடங்கிய பொழுது, சர்காரியாவால் விசாரிக்கபட்ட கருணாநிதி நிதிநிலை அறிக்கை படிக்க தகுதியற்றவர் என ஆடி சபையினை ரணகளமாக்கியவர்

சர்காரியா கமிஷன் கலைஞரை விடுதலை செய்தது, ஆனால் ஜெயா நீதிபதியின் சம்மட்டியால் அடிவாங்கி இருக்கின்றார்

அந்த ஜெயலலிதாவின் படம் , அதாவது குற்றவாளி என உச்சநீதிமன்றமே சொன்ன ஜெயாவின் படம் எப்படி இடம்பெறலாம்? இதற்கு வக்கலாத்து வாங்கும் விஜயதாரணி மீது என்ன நடவடிக்கையினை காங்கிரஸ் எடுத்தது?

அதனையாவது விட்டுவிடலாம்

முக ஸ்டாலினை சந்திக்க இந்த நக்மா என்பவரை அனுப்பியுள்ளது டெல்லி மேலிடம், தங்க தலைவியும் தமிழக காங்கிரசின் எதிர்காலமுமான தலைவி குஷ்பு சென்னையில் இருக்க நக்மாவினை அனுப்பியது ஏன்?

இதெல்லாம் மிக கடுமையான கோபத்தை வரவழைக்கும் விஷயங்கள், சங்கம் இதனை கடுமையாக கருதுகின்றது

நக்மாவினை ஏதோ பெரும் தலைவி போல சென்னைக்கு அனுப்பிய விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள சங்கம் தயாராக இல்லை

உடனே காங்கிரஸ் தன் நிலைபாட்டில் மாறாவிட்டால், அன்று பெரியார் “இனி காங்கிரஸை தமிழகத்தில் குழி தோண்டி புதைப்பதுதான் என் வேலை” என சூளுரைத்து கிளம்பியது போல சங்கம் கிளம்ப தயங்காது

டெல்லி காங்கிரசை வன்மையாக கண்டித்து கடைசி எச்சரிக்கையினை சங்கம் பதிவு செய்கின்றது