காங்கிரஸ் கர்நாடகாவில் வென்றால் காவேரியில் தீர்வு கிடைக்கும் : குஷ்பூ

Image may contain: 1 person, smiling

காங்கிரஸ் கர்நாடகாவில் வென்றால் காவேரியில் தீர்வு கிடைக்கும் என சொல்லியிருக்கின்றார் தலைவி

இதற்கு பலர் கொதிக்கின்றார்கள், உண்மையில் தலைவி சொல்லியிருப்பது சரியான வாதம்

மிக உயர்ந்த இடத்திலிருந்து அவர் இந்தியாவினை பார்த்துகொண்டிருப்பதால் சில உண்மைகளை சொல்ல முடிகின்றது.

காவேரியில் நிச்சயம் நியாயம் கிடைக்காமல் போகாது, தேர்தல் ஒன்றிற்காகவே வாரியம் அமைப்பது தள்ளிபோகின்றது, இனி கன்னட தேர்தல் முடிந்தால் ஏதாவது ஒரு முடிவுக்கு அம்மாநில அரசு வந்தே தீரவேண்டும்

அது காங்கிரஸ் அரசாக இருந்தால் கூடுதல் வசதி என்பதுதான் தலைவி சொல்லவருவது. பாஜகவினை விட காங்கிரஸ் கொஞ்சமேனும் தமிழர் நலம் மிக்கது

பாஜக அரசு தமிழர் நலம் முக்கியமென்றால் இந்த பழனிச்சாமி அரசை விட்டு வைக்குமா? இன்னும் பல விவகாரங்களில் அமைதி காக்குமா? என யோசித்தால் நிச்சயம் அது காவேரிக்கும் நியாயம் கொடுக்காது

இதனால்தான் தலைவி பாஜகவிடம் ஒரு நியாயமும் எதிர்பார்க்கமுடியாது, காங்கிரசே தமிழருக்கான நியாயத்தை செய்யும் என்ற ரீதியில் சொல்லி இருக்கின்றார்

மிகுந்த சிந்தனையும், உயர்ந்த கருத்துக்களும் கொண்ட தலைவி சொன்னதை புரிந்துகொள்ள உங்களால் முடியவில்லை என்றால் சங்கதிடம் கேளுங்கள்

சங்கம் தலைவி சார்பாக எல்லா விளக்கமும் கொடுக்க கடமைபட்டிருக்கின்றது

இன்று வந்த இந்த செய்திக்கு சங்கத்து சார்பாக கொடுக்கபடும் விளக்கம் இதுதான்