காசு கொடுத்து தமிழகத்தை வாங்க போவது நீயா? நானா?
காமராஜர் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என சொல்லி ஆட்சியினை பிடித்தனர்
பின்பு இந்திராதான் காரணம் என்றனர்
அதன் பின் கலைஞர் காரணம் என எம்ஜிஆரும், எம்ஜிஆர் காரணம் என கலைஞரும் சொல்லிகொண்டார்கள்
பின் கலைஞரும் ஜெயாவும் மாறி மாறி குற்றம்சாட்டினார்கள்
இன்று சசிகலாவும் ஸ்டாலினும் மாறி மாறி ஆரம்பித்துவிட்டார்கள்
இதில் தமிழகம் எல்லாவற்றையும் தொலைத்து நிற்கின்றது
அவர்கள் எல்லோரும் பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாய் வளர்ந்து நிற்கின்றார்கள்
இப்பொழுது இருப்பது ஒரே போட்டி
காசு கொடுத்து தமிழகத்தை வாங்கபோவது நீயா? நானா?
மொத்தத்தில் தமிழகம் விற்பனைக்கு, தமிழன் அடிமை வேலைக்கு
தமிழகம் விழிக்காது, விழிக்கவே விழிக்காது
இதன் மூலம் எது?
தன்மான திராவிடன் சுயமரியாதையோடு வாழ்வது என தொடங்கிய முழக்கம் அது.
ஆனால் முதலிலே மானத்தை தொலைத்து அரிசிக்கு சென்றார்கள், காரணம் தமிழனுக்கு மானத்தை விட அரிசியும் சினிமாவும் பிடித்திருந்ததை கண்டுகொண்டார்கள்
மானத்தை அன்றே மதுகடைகளில் தொலைத்தார்கள்,
அவனுக்கு ரூபாய்க்கு 3 படி அரிசி தருகின்றோம் என்றதும் தமிழன் சிரித்தான்
அதோ அந்த நடிகனனின் ஆட்டத்தை பார்த்து கைதட்டு என்றவுடன் மகிழ்ந்தான்
ஆக 3 படி அரிசிக்காகவும், நடிகனுக்காகவும் வொட்டை இழக்க துணிந்த தமிழன் இருக்கும் மாநிலம் எப்படி இருக்கும்?
இப்படித்தான் இருக்கும்
இதுவரை என்ன பிரச்சினையினை இந்த கட்சிகள் தீர்த்தன, இனி தீர்க்கும் திட்டம் என்ன என்றெல்லாம் அவன் யோசிப்பதில்லை
அவனை பொருத்தவரை அரசியல் ஒரு டென்னிஸ் விளையாட்டு
இப்பக்கமும் அப்பக்கமும் திரும்ப திரும்ப பார்த்து கைதட்டி கொண்டே இருப்பான்
ஆனால் அவனுக்கே தெரியாமல் அவன் காலடி மணல் கூட திருடுபோவதை கண்டுகொள்ளமாட்டான்
அவர்களோ ஆட்டத்திலும் மிக நுணுக்கமாக சம்பாதித்துகொண்டே இருப்பார்கள்
இப்பொழுது ஸ்டாலின் ஜல்லிகட்டு பந்தினை போட, சசிகலா திருப்பி அடிக்க அடுத்த ஆட்டம் ஆரம்பித்துவிட்டது
இனி இது காவேரி, டாஸ்மாக், கச்சதீவு, விவசாயம் என பல ரவுண்டுகள் வரும்
கட்சிகளின் தலமை மாறினாலும் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றதல்லவா?
இதுதான் திராவிட கட்சிகளின் சாமர்த்தியம்
வாழ்க தமிழகம்…