காஞ்சிபுர மர்ம முதியோர் இல்லத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மத்தியில் ஆளும் கட்சிதான் மாநிலத்திலும் மறைமுகமாக ஆளுகின்றது, சந்தேகமில்லை

ஆனால் அந்த காஞ்சிபுர மர்ம முதியோர் இல்லத்தில் இன்னும் பெரும் நடவடிக்கை எடுக்காததும், முறையாக விசாரிக்காததும் பெரும் கேள்விகளை எழுப்புகின்றன‌

நடிகையின் மரணத்திற்காக அஞ்சலியும் , கண்ணீரும் விடும் ஊடகங்கள் அந்த அனாதை முதியவர்களுக்கு என்ன செய்கின்றன என்றால் ஒன்றுமே இல்லை

இதில் எடுக்கும் நடவடிக்கை எல்லாம் சிறுபான்மையினர் நலன் என்ற வகையில் வந்து, வோட்டு வங்கியினை எல்லாம் பாதிக்காது என தெரிந்தும் அரசுகள் ஏன் வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் தெரியவில்லை

சங்கராச்சாரியார், நித்தி எல்லாம் பிடித்து போட்டு கதற வைத்த அரசுகள், இந்த இல்லம் மீது ஏன் கருணை பார்வை வீச வேண்டும்

ஆழ இறங்கி விசாரிக்கலாம், தவறு இல்லை என்றால் தொடர அனுமதிக்கலாம், ஆனால் பெரும்குற்றம் நடந்திருந்தால் இன்னும் பல முதியவர் உயிரை காப்பாற்றும் கடப்பாடு அரசுக்கு உண்டா இல்லையா?

இதில் எல்லாம் வோட்டு வங்கி பாதிக்காது, உண்மையில் அங்கு அயோக்கிதனமும் கொடூரமும் நடந்திருந்தால் எந்த கிறிஸ்தவனும், சிறுபான்மையினும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாற்றி வாக்களிக்கபோவதில்லை காரணம் அவர்களுக்கும் மனசாட்சி உண்டு

இதன் உண்மைநிலையினை உடனே அறிந்து சொல்ல வேண்டிய மிக பெரும் பொறுப்பில் அரசுகள் இருக்கின்றன, தற்போதைய ஆக்டிவ் முதல்வரான ஆளுநருக்கும் அந்த பொறுப்பு உண்டு