காணவே இல்லை

மூச்சுக்கு முன்னூறு தரம் பெரியார் மண் என்பவர்களை எல்லாம் பொன் அமராவதி பக்கம் பற்றி எரியும் இத்தருணத்தில் காணவே இல்லை

அரியலூரில் திருமாவுக்காக குரல் கொடுத்த வீரமணியினை இங்கு காணவில்லை, ஸ்டாலின் சத்தமே இல்லை

இன்னும் சமூக நீதி இம்சைகளான சுபவீ, மதிமாறன் , கோட்டார் கொளத்தூர்மணி எல்லாம் கனத்த அமைதி

இவர்களை மிக நன்றாக கவனித்தால் ஒன்று புரியும்

பொதுவாக சாதிகலவரத்தில் கனத்த அமைதி காப்பார்கள் ஆனால் வன்னியன் இருந்தால் ராமதாஸுக்காக பொங்குவார்கள்

ஒரே நிபந்தனை ராமதாஸ் எதிர்கோஷ்டியில் இருக்க வேண்டும் இவர்கள் கூட்டணி என்றால் கப்சிப்

ஆனால் எக்காரணம் கொண்டும் முக்குலத்தோர் சம்பந்தபட்ட கலவரங்களுக்கு வாயே திறக்கமாட்டார்கள்

ஏனென்றால் அதுதான் வாக்கு வங்கி

பொன் பரப்பி என்றால் கத்திய ஸ்டாலினும் வீரமணியும் பொன் அமராவதி என்றால் அமைதி ஏன்?

எல்லாம் முக்குலத்தோருக்கான பயம்

வன்னியன் செய்தால் தவறு, முக்குலத்தோர் செய்தால் அதுவே சரி

இதெல்லாம் இவர்களின் நியாயங்கள்

ஒருவேளை பெரியார் மண் என்பது இதுதான் போலிருக்கின்றது

இதுவே பிராமணன் ஒருவன் சம்பந்தபட்டிருக்கட்டும் இந்நேரம் தமிழகம் தாங்கும் என நினைக்கின்றீர்கள்?

ஆடி ஆடி தீர்ப்பார்கள் , எல்லா வகை நடனமும் ஆடுவார்கள்

முக்குலத்தோருக்கு ஒரு நீதி மற்ற குலத்தோருக்கு தனி நீதி அதிலும் பிராமணனுக்கு ஸ்பெஷல் நீதி என்பதுதான் திராவிடம், பெரியாரியம்