“காதல் தேசம்” என்றொரு படம்

“காதல் தேசம்” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, தோல்வியினை காணசகிக்காத ஒருவனுக்கு ஏழை எதிராளி வெற்றியினை விட்டு கொடுக்கின்றான் இருவரும் நண்பராகின்றார்கள்

பின் ஒரே பெண்ணை காதலித்து கதை மாறுகின்றது

இது அன்றே “ஆலயமணி” படத்தில் சொல்லபட்ட கதை, சிவாஜியும் எஸ்.எஸ் ராஜேந்திரனும் இப்படித்தான் நண்பராவர்கள்,

இப்படித்தான் சரோஜா தேவிக்காய் சண்டை இடுவார்கள்

ஆக அந்த “ஆலயமணி” கதையினை “காதல் தேசம்” எடுத்து அதற்கு அக்காலத்தில் ஏக விளம்பரம் வேறு

இப்படி காப்பியடித்த இயக்குநர் யாரும் நிலைத்ததாய் சரித்திரமில்லை, இயக்குநர் கதிர் காணாமல் போனதில் ஆச்சரியமுமில்லை