காந்தியின் நாடகம்
சுமார் 900 வருடமாக இந்திய சுதந்திரபோர் நடந்தது, அந்நிய ஆப்கானியருக்கும் இந்திய இந்துக்களுக்கும் இடையில் நடந்த அந்த போரில் 16ம் நூற்றாண்டில் பெரும் திருப்பத்தை கொடுத்தான் வீரசிவாஜி
அவன் தொடங்கிவைத்த பெரும் போரில் மொகலாயமும் இந்துக்களும் பெரும் போர் நிகழ்த்த அந்த இடைவெளியில் சத்தமில்லாமல் தன் ஆட்சியினை நிறுவினான் பிரிட்டிஷ் கம்பெனிக்காரன்
இந்துக்களை துணைக்கு சேர்த்து நவாபுகளையும், நவாபுகளுடன் கைகோர்த்து இந்துமன்னர்களையும் ஒடுக்கி தந்திரமாக தன் ஆட்சியினை நிறுவினான் வெள்ளையன்
அவன் 1500களில் இங்கு கால்வைத்தது முதல் 1700களில் ஆட்சி நிறுவ தொடங்கி, 1800களில் தன் ஆட்சியினை முழுக்க நிறுவியது வரை அவன் ஆராய்ந்து எழுதிய அறிக்கையில் சில முடிவுகளில் சரியாக இருந்தான்
இந்துக்கள் போர்குணம் மிக்கவர்கள் அவர்கள் போராட்டம் 900 வருடத்திற்கு மேல் நீண்டது , அதை அவர்கள் மறக்க வேண்டும் அல்லது மறக்கடிக்கபட வேண்டும்
இங்கு இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்குமான குழப்பம் வேண்டும் அதை வைத்து குளிர்காய வேண்டும்
இந்துக்கள் ஆயுதம் தூக்கவே கூடாது, ஆயுதம் தாங்கும் தலைவன் அவர்களுக்கு வரவே கூடாது
இப்படிபட்ட நிலையில் அவனுக்கு எதிர்ப்புகள் அதிகரித்தன அப்பொழுது வெள்ளையனே காங்கிரஸ் இயக்கம் என ஒன்றை தொடங்கி இதுதான் உங்கள் குறைகளை சொல்லும் அமைப்பு என கைகாட்டினான் அது அல்லாதோர் எல்லோரும் கொல்லபட்டனர்
1800களின் கடைசியிலே இந்துக்கள் கொந்தளிக்க தொடங்கினார்கள், தேசமெங்கும் அணல் அடிக்க ஆரம்பித்தது, ஆயுதம் தரிக்கவிடாத வெள்ளையனை ஆயுதம் தூக்காமலே விரட்டுவோம் என வ உ சியும் திலகரும் இன்னும் பலரும் வரிந்து கட்டி அவன் பொருளாதாரத்தில் அடிக்க ஆரம்பித்தார்கள்
அப்பொழுது ஒரு பொம்மை தனக்கு தேவை என்றும், தன் எதிரிகளை எல்லாம் அடக்க ஒரு கைபாவை தேவை எனவும் வெள்ளையன் உணர்ந்து காந்தி என்பவரை அழைத்துவந்தான்
ஒரு மடாதிபதி சாயல் கொண்ட காந்தி உணர்ச்சியும் போராட்ட வேகமும் பெரும் மோதலும் கொண்ட களமான சுதந்திர போராட்டத்தின் தலமைக்கு வந்ததெல்லாம் காலகொடுமை
அதன்பின் தேசம் விடுதலையில் இருந்து “சில உரிமை”க்கு மாறிற்று
வ.உசியின் சுதேசி கப்பல் போன்ற கொள்கைகளுக்கு எக்காலமும் இங்கு ஆதரவு உண்டு, அதை கதர், கைராட்டை, ஒத்துழையாமை என திசைமாற்றி காந்தி இழுத்து சென்றாரே தவிர சுதந்திரம் வாங்கும் கனவெல்லாம் அவரிடம் இல்லை
இதனால் யாரெல்லாம் பூரண சுதந்திரம் என சொன்னார்களோ அவர்களையெல்லாம் விலக்கி வைத்தார், பகத்சிங் நேதாஜி என பலர் காந்தியினை விட்டு விலகியது இப்படித்தான்
சுதந்திரம் வேண்டாம் உரிமை போதும் என சொல்லிகொண்டிருந்த காந்திக்கு பெரும் சவாலாக எழும்பியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்
அதன் எழுச்சியும் மக்கள் திரளும் காந்திக்கு அச்சுறுத்தலை கொடுத்தன, இனியும் நாம் விடுதலை கேட்காமல் வெறும் சித்தாந்தம் பேசிகொண்டிருந்தால் மக்கள் தன்னை கைவிட்டுவிடுவார்கள் என அஞ்சினார்
கிட்டதட்ட மக்களும் அப்படித்தான் முடிவுக்கு வந்திருந்தனர்
மிக்சரியான தந்திரகாரரான காந்தி, அந்த ஆகஸ்டு 8ம் தேதியினை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி தன்னை நிரூபித்து கொண்டார்
வருடம் தோறும் வரும் ஆகஸ்டிற்கும் அந்த ஆகஸ்டிற்கும் வித்தியாசம் உண்டு, காரணம் அது வெள்ளையன் கலங்கி நின்ற 1942ம் ஆண்டு ஆகஸ்டு, கலங்க வைத்தவன் ஹிட்லர்
முதலாம் உலகப்போரிலே இந்தியரை நம்ப வைத்து ஏமாற்றியது பிரிட்டன், நம்பி ஏமாந்தவர் காந்தி
போரில் கலந்துகொள்ளுங்கள் சுதந்திரம் தருவோம் என பிரிட்டன் சொன்னது, காந்தி கேட்டுகொண்டதால் இந்தியரும் கலந்து கொண்டு போராடினர், ராஜ்புத் வீரர்களும், சீக்கிய வீரர்களும் அதில் மகா முக்கியம். அவர்களால்தான் முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி சாத்தியம் இல்லாவிட்டால் ஆஸ்திரிய ஹங்கேரி அல்லது கெய்சரின் ஜெர்மன் பிரிட்டனை துடைத்தெரிந்திருக்கும்
ஆனால் வெற்றிபெற்ற பிரிட்டன் பெப்பே காட்டியது, ஆனால் விதி ஹிட்லர் உருவத்தில் கொஞ்சநாளில் வந்தது. ஹிட்லரின் எழுச்சி கடவுளை தவிர யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது
பிரிட்டனுக்கு அமெரிக்கா அதே வலையினை வீச சொன்னது, காரணம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், பெரும் ராணுவம் திரட்டலாம் எனும் தந்திரம், பிரிட்டனும் அழைத்தது வாருங்கள் வந்து யுத்தத்தில் கலந்துகொள்ளுங்கள், ஹிட்லர் செத்ததும் நாடு உங்களுக்கு என பேசதொடங்கியது
நயவஞ்சகமாக அது இன்னொரு திட்டத்தை தீட்டிற்று, இரு இந்தியாவாக பிரித்து (மத ரீதியாக அல்ல) ஒன்றிற்ற்கு டொமினியன் எனும் சுயாட்சி அந்தஸ்தும், இன்னொரு பகுதியினை மக்கள் விருப்பம் எனும் பெயரில் குழப்பிவிடவும் திட்டம் தீட்டிற்று
பிரிட்டன் இரண்டாம் உலகபோரில் இந்தியர் பங்குபெற வேண்டும் என கோரிற்று
இன்னொரு வகையில் இந்தியாவினை மிரட்டிய ஜப்பானையும் கணக்கில் கொண்டார் அது நேதாஜி, ஜப்பானிய படைகளுடன் அவர் சேர்ந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்தார்
இந்நிலையில் ஹிட்லர், நேதாஜி காலங்களில் பிரிட்டனை ஆதரித்த காந்தி, சோவியத் இருந்த நேரமும் பிரிட்டனை ஆதரித்த காந்தி, பிரிட்டனுக்கு ஆதரவாக இந்திய படைகள் அனுப்ப தலையசைத்த காந்தி மக்களை குழப்ப ஒரு நாடகம் நடத்தவும் தவறவில்லை
இதே ஆகஸு 8, பம்பாய் மாநாடு 1942
இந்தியா விட்டு வெளியேறு எனும் பெரும் “Quit India Movement” புரட்சியினை தொடங்கினார், அவர் எடுத்த போராட்டங்களில் அதுதான் மிக பெரிது. அவர் அழைத்ததும் இந்தியா பொங்கிற்று அந்த பரந்த இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவர் அழைப்பு எதிரொலித்தது
ஆம் அதுவரை வெள்ளையனை வெளியேற சொல்லாமல் அஹிம்சை,சத்தியாகிரகம் என குழப்பி அடித்த காந்தி அப்பொழுதுதான் “வெளியேறு” எனும் வார்த்தைக்கே வந்திருந்தார்
நாடகபடி வெள்ளையன் அவரை சிறையில் அடைத்தான், நிச்சயம் காந்தி “வெளியேற” சொல்லாவிட்டாலும் வெள்ளையன் வெளியேறியிருப்பான்
அமெரிக்க எழுச்சி, சோவியத் பலம், ஹிட்லரின் அட்டகாசம் என சமாளிக்கமுடியாமல் அவன் வீழ்ந்து கொண்டிருந்தான்
தன் வீழ்ச்சியினை காந்தியின் போராட்ட வெற்றி என மடைமாற்றி அதில் வெற்றியும் பெற்றான் வெள்ளையன்
இன்றுவரை ஆகஸ்ட் 8 என்பது ஏதோ காந்தி வெள்ளையனை விரட்டி அடித்த “வெள்ளையனே வெளியேறு” என நாளாக கருதபடுவதெல்லாம் அப்பட்டமான வரலாற்று மோசடி
ஒரு பக்கம் வெள்ளையனுக்கு ஆதரவாக படை அனுப்பிய காந்தி, ஹிட்லர் சோவியத் ஜப்பான் நேதாஜி என பிரிட்டனின் எதிரிகள் பக்கம் இந்திய மக்கள் சென்றுவிடாமல் இருக்க முதன் முதலாக “வெள்ளையனே வெளியேறு” என நாடகமாடினார்
வெள்ளையன் தன் பலவீனத்தை அவரில் காட்டி அவன் திட்டமிட்டபடியே நாட்டினை பிளந்துபோட்டு சென்றான்
“வெள்ளையனே வெளியேறு” என பெரும் குழப்பம் செய்த காந்தியால் “வெள்ளையனே நாட்டை பிளக்காதே” என ஏன் சொல்லமுடியவில்லை?
அதுதான் காந்தி, முழு வெள்ளை அடிமையான காந்தி
ஆம், அவர் நடத்தியது ஒரு ஓரங்க நாடகம், அந்த நாடகத்தின் தலைப்பு “வெள்ளையனெ வெளியேறு” என்பது