காந்தியை சுட்ட வழக்கு இன்று விசாரணை
காந்தியை சுட்ட வழக்கு இன்று விசாரணை
காந்தியினை கொல்ல பலமுயற்சி நடந்தது, கோட்சேயின் முயற்சிதான் வெற்றிபெற்றது, அந்த வழக்கில் ஒரு மர்ம்மும் இருந்தது
காந்தி உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தன, ஆனால் கோட்சே 3 குண்டுகள்தான் சுட்டிருந்தானாம்
வழக்கில் கோட்சே குற்றம் நிரூபிக்கபட்டு அவனும் தொங்கி செத்தாகிவிட்டது, ஆனால் 4ம் குண்டில்தான் காந்தி உயிர் போனது, முதல் மூன்று குண்டுகளில் அவர் சாகவில்லை என்றொரு வாதம் இருந்தது
அந்த வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை, இன்றும் விசாரணையாம்
காந்தி செத்து 69 வருடம் ஆகின்றது, அவரின் பேரன்களே வயதானவர்களாகிவிட்டனர், இதில் இன்னும் காந்தி கொலை வழக்கு நடக்கின்றதாம்
காந்தி கொலைக்கு திட்டமிட்டோர், சுட்டோர், துப்பாக்கி கொடுத்தோர் என எல்லோரும் போயாயிற்று, எலும்பு கூட மிச்சமில்லை
இனி உண்மையினை கண்டறிந்து யாரை தண்டிப்பார்களோ தெரியாது.
வழக்கு அப்படி இருக்க, தமிழிசை போன்றோர் காந்தியினை கொன்றவனை தண்டிப்பதில் மோடி தீவிரம் என சொல்லாமல் இருக்கவேண்டும்.