காமன்வெல்த் போட்டிகள் : இந்தியா 26 தங்கங்களுடன் மூன்றாம் இடம்
ஒரு வழியாக காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தாயிற்று, இந்தியா 26 தங்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கின்றது
இதனால் இந்தியா தடகளத்தில் உயர்ந்துவிட்டதா என்றால் ஆசிய விளையாட்டுபோட்டியில் ஒரு தங்கத்திற்கே படாத பாடுபடும் நிலைவரும்
சீனா ஜப்பான் கொரியா என களமிறங்கி மிரட்டுவார்கள்
அதன்பின் ஒலிம்பிக் என்றால் ஒரு வெண்கலத்திற்கே ஏங்க வேண்டும். அமெரிக்கா ரஷ்யா ஜெர்மன் ஹாலந்து என பின்னி எடுப்பார்கள்
தடகள விளையாட்டுகளில் இந்தியா இன்னும் கொஞ்சதூரம் கடக்க வேண்டும்
ஏன் தடகளத்தில் அப்படி எல்லா நாடுகளும் கவனம் செலுத்துகின்றன
தடகள விளையாட்டுபோட்டியில் நல்ல வீரர்களை உருவாக்கும் நாடே மிகசிறந்த ராணுவத்தை கொண்டிருக்கும்
அமெரிக்கா, ரஷ்யா, சீனா எல்லாம் விளையாட்டில் விழுந்து விழுந்து கவனம் செலுத்துவது அதனால்தான்
முன்பு கிரேக்கர்கள் பெரும் வல்லரசாக எழும்ப அக்காலத்தில் அவர்கள் விளையாடிய விளையாட்டுக்களே காரணம்
விளையாட்டு உடலை வலுபடுத்தும் போராட்ட குணத்தினை வளர்க்கும். அந்த சூழலில் வளரும் இனம் ராணுவபலத்தில் சாதிக்கும்
இந்தியாவிலும் தடகள விளையாட்டுக்கள் ஆர்வத்தோடு நடத்தினால் பதக்கமும் கூடும் , ராணுவத்திற்கும் பலம் அதிகரிக்கும்