காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார்
சிலர் 1969ல் காமராஜரை நாகர்கோவிலில் கலைஞர் பெரும் முயற்சி எடுத்தும் தோற்கடிக்கமுடியாமல் போன கதைகளை பேசிகொண்டிருக்கின்றனர்
உண்மையில் அந்த தேர்தல் காமராஜருக்கு வாழ்வா? சாவா? என்றிருந்தது, தொடர் வெற்றியில் காமராஜரை சுதாரிக்காமல் அடித்து வெளியேற்றவேண்டும் என்ற வெறி கலைஞரிடம் இருந்தது
காமராஜர் நாடார் என்பதும், குமரி தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர் என்பதும் அவருக்கு கூடுதல் பலம் என களம் இருந்தது
கலைஞரோ கிறிஸ்தவர்கள் அதிகமான அத்தொகுதியில் பிரபலமான கிறிஸ்தவ நாடாரை நிறுத்தினால் வெற்றிபெறலாம் என கணக்கிட்டு டாக்டர் மத்தியாசை நிறுத்தினார்
திமுக vs காங்கிரஸ் என வந்திருக்க வேண்டிய களத்தினை இந்துநாடார் vs கிறிஸ்தவ நாடார் என நுட்பமாக திசை திருப்பினார் கலைஞர்
இதில் 1969ல் கலைஞர் ஆட்சி என்பதால் கிறிஸ்தவர்கள் கலைஞர் பக்கம் சரிந்தனர், மத்தியாஸ் கிறிஸ்தவர் என்பதால் அவரை ஆதரிக்கவேண்டும் என கிறிஸ்தவ தலமைகளே பகிரங்கமாக கேட்க தொடங்கின
காமராஜரின் எதிரிகள் CSI கிறிஸ்தவர்கள், இவ்வளவிற்கும் நாடார்கள் நிரம்பிய சபை அது
காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார், இன்னும் காமராஜரின் வாடகை வீட்டை இதோ ஏழை பங்காளனின் சொநத பங்களா என அண்ணா சிலை அருகே பேனர் வைத்தெல்லாம் பிரச்சாரம் செய்தார்
ஆனால் முடிவில் காமராஜர் அபார வெற்றிபெற்றார், லட்சகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்
கலைஞரோ “நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல, நாடார் மன்ற தேர்தல்” என சொல்லிவிட்டு விடைபெற்றார்
2மாதம் நாகர்கோவிலில் தங்கி அவர் செய்த சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் எடுபடவில்லை
அதன்பின் 1971ல் கூட கலைஞர் நாகர்கோவில் பக்கம் வரவில்லை, “நெல்லை என் எல்லை, குமரி என் தொல்லை” என சொல்லி கொண்டார்
ஆனால் இந்தவெற்றிக்கு பின் அந்த இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என திமுக விதைத்த விதை முளைத்து வளர்ந்தது
அது பல இடங்களில் கலவரமாக வெடித்தது, அந்த சாதிகலவரம் மதகலவரமாக மாறிற்று
இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்று தேர்தலில் விதைத்த விதை பின்பு இந்து கிறிஸ்தவ மோதலாக வெடித்தது
நேசமணி, ஜீவா போன்ற பெரும் பிம்பங்களின் பெயர்கள் எல்லாம் மறைய தொடங்கி பெரும் மதவாதிகள் பெயர்கள் வந்தன
மண்டைக்காடு கலவரமெல்லாம் நடந்தது
அந்த கலவரத்திற்கு பின் இந்துக்களின் பெரும் எழுச்சியில் கன்னியாகுமரி தொகுதி இப்பொழுது பாஜக கோட்டையாக நிற்கின்றது
பாஜக தமிழகத்தில் முதல் முதலாக நாகர்கோவில் பக்கம் காலூன்றியது இப்படித்தான், முதல் பாஜக எம்.எல்.ஏ எம்பி எல்லாம் இப்படித்தான் உருவானார்கள்
பொன்னார் உருவாகி வந்ததெல்லாம் இப்படித்தான்
ஆனால் விதை கலைஞர் போட்டது
ஆக என்றோ காமராஜருக்கு எதிராக உருவாக்கபட்ட அரசியல் விளையாட்டு எங்கோ திசை திரும்பி என்னவெல்லாமோ ஆயிற்று
கலைஞர் செய்த பெரும் தவறு அது, சொன்னால் திட்டுவார்கள் ஆனால் உண்மை அதுதான்
அத்தோடு முடிந்ததா என்றால் இல்லை
அந்த டாக்டர் மத்தியாஸ் என்ன ஆனார்?
அவரால் திறுக்குறுங்குடி பக்கம் பெரும் மலைக்காடுகளை வளைக்க முடிந்தது,பெரும் எஸ்டேட்டை உருவாக்கினார்
அப்பொழுது காமராஜரை எதிர்க்க அரசியலுக்கு கொண்டுவரபட்ட அவருக்கு மலைகளை வளைப்பது எளிதாயிற்று
இது எதில் வில்லங்கமானது?
கலைஞர் அரசு கொடுமுடியாறு அணையினை பெரும் திட்டமாக கட்ட தொடங்கியபொழுது நீர்பிடிப்பு பகுதியாக மத்தியாசின் எஸ்டேட் மூழ்க இருந்தது
அவர் குடும்பம் வழக்கெல்லாம் நடத்தியது, அணை தாமதமானது
இந்த வைகை அணையினை கட்டும்பொழுது கிராமங்களை எல்லாம் காலி செய்யவைத்து பிரமாண்டமாக கட்டினார்கள்
ஆனால் கொடுமுடியாறு அணையில் மத்தியாசின் எஸ்டேட்டை கைபற்றமுடியாமல் தயங்கியது கலைஞர் அரசு, காரணம் நாகர்கோவில் இடைதேர்தல் கைமாறு
இறுதியில் அவர் சொத்துக்களுக்கு பாதிப்பில்லா வகையில் முல்லை பெரியாறு போல கட்டபட வேண்டிய அணை நீச்சல் குளம் அளவிற்கு, திருவாரூர் கோவில் தெப்பகுளம் அளவிற்கு கட்டபட்டாயிற்று
அந்த அணையால் துளியும் பிரயோசனமில்லை, ஆனால் கட்டியது கலைஞர் என உபிக்கள் ஆனந்தபடுவார்கள்
ஆனால் அதன் பின்னால் இருபபது அப்பகுதி மக்களுக்கான பெரும் துரோகம்
காமராஜரை எதிர்க்க மத்தியாசை கொண்டுவந்து அவருக்கு மலைகளை வளைத்துகொடுத்து, அணையினை சிறிதாக்கி பெரும் துரோகத்தை ராதாபுரம் பகுதி மக்களுக்கு செய்திட்ட துரோகம்
மறக்கமுடியா சம்பவங்கள் அவை
சிலர் 1969 கதைகளை பேசபேச அவை எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன
காமராஜரை எதிர்த்து அங்கு பரப்பட்ட சாதிவெறி மதவெறியாய் மாறி என்னவெல்லாமோ ஆயிற்று, குமரி மக்களின் சோகம் அது
மத்தியாசின் நரித்தனம் கொடுமுடியாறு அணையினை பாதித்தது, ராதாபுரம் மக்களின் தீரா சோகம் அது
இதன் பின்னணியில் இருந்தது யார் என சொன்னால் நாம் ஆரிய அடிவருடி..
நிச்சயம் செய்திருக்க கூடாத காரியங்கள் அவை